நண்பர்களே,
இந்த பதிவில் நான் இரண்டு வசனங்களை எடுத்துக்காட்டுகிறேன். படியுங்கள், கவனமாக படியுங்கள்.
(தாங்கள் ஒருபோதும் கவனிக்காமற்போன வசனங்களை எடுத்துரைக்கும்போது ஒருசிலர்: “இந்த ஆள் வசனத்தை புரட்டுகிறார்” என்றும் “இந்த ஆள் கிறித்தவர்களை குழப்புகிறார்” என்றும் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.)
1 கொரி 5ம் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறேன். இந்த அதிகாரத்தில் மாற்றாந்தாய்யை (தகப்பனுடைய மனைவி - step mother) வைத்துக்கொண்டிருக்கிற ஒருவரைப்பற்றி பவுல் கொரிந்த சபைக்கு எழுதுகிறார்.
இந்த விபசாரியை கொரிந்த சபைசிலுள்ளவர்கள் அவர்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறதைப்பற்றியே இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (வசனம் 2).
இந்த சூழ்நிலைக்கு பவுல் கூறுகிற தீர்ப்பு என்னவென்றால்:
கவனமாக வாசியுங்கள்: இந்த கொடிய பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறதின் நோக்கம் என்னவென்றால்:
பெருபாலும் கிறித்தவப் போதகர்கள் இந்த வசனத்துக்கு கொடுக்கிற விளக்கம் என்னவென்றால்: ஒருவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவனுடைய உடம்பில் நோய்கள் ஏற்ப்படும் என்றும் அந்த நோய்களாலே வருத்தப்பட்டு அவன் கர்த்தரிடம் திரும்புவதால் கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்படுவான் என்றுமே.
ஒருவனுக்கு உடம்பில் நோய்கள் ஏற்பட்டால் அவன் கர்த்தரிடம் திரும்புவான் என்கிற எண்ணத்துக்கு வேதத்தில் அத்தாட்சி இருக்கிறதா? முற்றும் மாறாக, நோய்களினாலே தண்டிக்கப்படுகிற பாவிகள் தேவனுடைய நாமத்தை இன்னும் அதிகமாக தூஷிப்பார் என்று வேதம் கூறுகிறது.
பத்து முறை நோய்களால் வாதிக்கப்பட்டும் பார்வோனும் அவனுடைய ஆட்களும் மனந்திரும்பாமல் அழிந்தார்கள் என்பதை யாத்திராகமத்தில் பார்க்கிறோம்.
நோய்களினால் தண்டிக்கப்படுகிறவர்கள் மனம்திரும்பி இரட்சிக்கப்படும் என்கிற எண்ணம் உண்மையாயிருந்தால் தேவனுடைய ஒரே பேறான குமாரன் பாவிகளை மீட்கும்படியாக மனிதனாய் பிறந்து, சிலுவையில் பாடுபட்டு மரிக்க அவசியமே இல்லை, பாவிகள் அனைவரையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுடைய ஆவி இரட்சிக்கப்படுமல்லவா? எவ்வளவு சிம்பிள்?!
சபையின் மூப்பர்களும், போதகர்களும் அந்த பாவியின் தலையின் மேல் கைபோட்டு: “உன்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று சொன்னால் உடனே சாத்தான் அவனை ஏற்றுக்கொள்வாரா? அல்லாவிட்டால், அப்படிப்பட்டவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கும்படிக்கு எதாவது மந்திரம் உங்களிடம் இருக்கிறதா?
ஒரு கொடிய பாவியை உங்கள் சபை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தும் அவனுக்கு நோய்கள் ஏற்ப்படாமற் போனால் அதின் விளக்கம் என்ன?
ஒருவேளை உங்கள் சபையாருக்கு கொடிய பாவிகளை சாத்தானுக்கு நேரடியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமானால் சாத்தானுடைய முகவரி (address) வேதத்திலிருந்தும்:
அதாவது, சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் இருக்கிறது. பெர்கமு (தற்பொழுது அதின் பெயர்: Bergama) துருக்கி நாட்டில் இஸ்மிர் (Izmir) மாநிலத்தில் இருக்கிறது. உங்கள் சபையிலிருக்கும் பாவிகளை அங்கே போய் சாத்தானிடம் ஒப்புக்கொடுங்கள்!
பொதுவாக, சாத்தான் என்பவர் தேவதூஷகன், தூஷிக்கிறவன் என்று எண்ணப்படுகிறது. ஆனால், தேவதூஷணம் பண்ணுகிறவர்களை அப்படி பண்ணாதபடிக்கு கற்றுக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்:
உங்கள் சபையில் தேவதூஷணம் பண்ணுகிறவர்களிருந்தால் அவர்களை (முன்சொன்ன முகவரியில்) சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள், அவர்கள் தேவதூஷணம் பண்ணாதபடிக்கு சாத்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்!
கிறித்தவர்களின் பொதுவான எண்ணத்தின்படி சாத்தான் மனிதர்களை பாவம் பண்ணுவதற்கு ஏவுகிறவன்; மனிதர்களை பாவத்துக்கு இழுத்துக் கொண்டுபோகிறவன், மனிதனுடைய நாசத்திற்கு காரணமானவன். ஆனால், இந்த இரண்டு வசனங்களில் சாத்தான்:
மெய்யாகவே, சகோதரா, சகோதரீ, சாத்தானயப்பற்றிய புரிந்துகொள்ளுதலில் எங்கேயோ பெரிய தவறு ஏற்பட்டுள்ளது.
இந்த பதிவில் நான் இரண்டு வசனங்களை எடுத்துக்காட்டுகிறேன். படியுங்கள், கவனமாக படியுங்கள்.
(தாங்கள் ஒருபோதும் கவனிக்காமற்போன வசனங்களை எடுத்துரைக்கும்போது ஒருசிலர்: “இந்த ஆள் வசனத்தை புரட்டுகிறார்” என்றும் “இந்த ஆள் கிறித்தவர்களை குழப்புகிறார்” என்றும் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட மறுமொழிகளை எதிர்பார்க்கிறேன்.)
சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?
1 கொரி 5ம் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறேன். இந்த அதிகாரத்தில் மாற்றாந்தாய்யை (தகப்பனுடைய மனைவி - step mother) வைத்துக்கொண்டிருக்கிற ஒருவரைப்பற்றி பவுல் கொரிந்த சபைக்கு எழுதுகிறார்.
- 1கொரி 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் (புறஜாதியார்) சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
இந்த விபசாரியை கொரிந்த சபைசிலுள்ளவர்கள் அவர்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறதைப்பற்றியே இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. (வசனம் 2).
இந்த சூழ்நிலைக்கு பவுல் கூறுகிற தீர்ப்பு என்னவென்றால்:
- 1கொரி 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புச்செய்கிறேன்.
கவனமாக வாசியுங்கள்: இந்த கொடிய பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறதின் நோக்கம் என்னவென்றால்:
- அவனுடைய மாம்சத்தின் அழிவு.
- அவனுடைய ஆவி கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்படுவது.
பெருபாலும் கிறித்தவப் போதகர்கள் இந்த வசனத்துக்கு கொடுக்கிற விளக்கம் என்னவென்றால்: ஒருவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவனுடைய உடம்பில் நோய்கள் ஏற்ப்படும் என்றும் அந்த நோய்களாலே வருத்தப்பட்டு அவன் கர்த்தரிடம் திரும்புவதால் கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்படுவான் என்றுமே.
ஒருவனுக்கு உடம்பில் நோய்கள் ஏற்பட்டால் அவன் கர்த்தரிடம் திரும்புவான் என்கிற எண்ணத்துக்கு வேதத்தில் அத்தாட்சி இருக்கிறதா? முற்றும் மாறாக, நோய்களினாலே தண்டிக்கப்படுகிற பாவிகள் தேவனுடைய நாமத்தை இன்னும் அதிகமாக தூஷிப்பார் என்று வேதம் கூறுகிறது.
- வெளி 16:9 அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
பத்து முறை நோய்களால் வாதிக்கப்பட்டும் பார்வோனும் அவனுடைய ஆட்களும் மனந்திரும்பாமல் அழிந்தார்கள் என்பதை யாத்திராகமத்தில் பார்க்கிறோம்.
நோய்களினால் தண்டிக்கப்படுகிறவர்கள் மனம்திரும்பி இரட்சிக்கப்படும் என்கிற எண்ணம் உண்மையாயிருந்தால் தேவனுடைய ஒரே பேறான குமாரன் பாவிகளை மீட்கும்படியாக மனிதனாய் பிறந்து, சிலுவையில் பாடுபட்டு மரிக்க அவசியமே இல்லை, பாவிகள் அனைவரையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுடைய ஆவி இரட்சிக்கப்படுமல்லவா? எவ்வளவு சிம்பிள்?!
உங்கள் சபையில் விபசாரக்காரனாகிய ஒரு கொடிய பாவி இருந்தால் அவனை சாத்தானுக்கு எப்படி ஒப்புக்கொடுப்பீர்கள்?
சபையின் மூப்பர்களும், போதகர்களும் அந்த பாவியின் தலையின் மேல் கைபோட்டு: “உன்னை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்” என்று சொன்னால் உடனே சாத்தான் அவனை ஏற்றுக்கொள்வாரா? அல்லாவிட்டால், அப்படிப்பட்டவனை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கும்படிக்கு எதாவது மந்திரம் உங்களிடம் இருக்கிறதா?
ஒரு கொடிய பாவியை உங்கள் சபை சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தும் அவனுக்கு நோய்கள் ஏற்ப்படாமற் போனால் அதின் விளக்கம் என்ன?
ஒருவேளை உங்கள் சபையாருக்கு கொடிய பாவிகளை சாத்தானுக்கு நேரடியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமானால் சாத்தானுடைய முகவரி (address) வேதத்திலிருந்தும்:
- வெளி 2:12: பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
- வெளி 2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும்,...
அதாவது, சாத்தானுடைய சிங்காசனம் பெர்கமுவில் இருக்கிறது. பெர்கமு (தற்பொழுது அதின் பெயர்: Bergama) துருக்கி நாட்டில் இஸ்மிர் (Izmir) மாநிலத்தில் இருக்கிறது. உங்கள் சபையிலிருக்கும் பாவிகளை அங்கே போய் சாத்தானிடம் ஒப்புக்கொடுங்கள்!
தேவதூஷகர்கள் தேவதூஷணம் பண்ணாதபடிக்கு கற்றுக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது!
பொதுவாக, சாத்தான் என்பவர் தேவதூஷகன், தூஷிக்கிறவன் என்று எண்ணப்படுகிறது. ஆனால், தேவதூஷணம் பண்ணுகிறவர்களை அப்படி பண்ணாதபடிக்கு கற்றுக்கொள்ளும்படிக்கு சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்:
- 1திமோ 1:19 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
- 1திமோ 1:20 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
- (that they may learn not to blaspheme - KJV -
- இம்னேயும், அலெக்சாண்டரும் இத்தகு 2 உதாரணங்கள். தேவனுக்கு எதிராக பேசக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன் - WBTC)
உங்கள் சபையில் தேவதூஷணம் பண்ணுகிறவர்களிருந்தால் அவர்களை (முன்சொன்ன முகவரியில்) சாத்தானுக்கு ஒப்புக்கொடுங்கள், அவர்கள் தேவதூஷணம் பண்ணாதபடிக்கு சாத்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்!
கிறித்தவர்களின் பொதுவான எண்ணத்தின்படி சாத்தான் மனிதர்களை பாவம் பண்ணுவதற்கு ஏவுகிறவன்; மனிதர்களை பாவத்துக்கு இழுத்துக் கொண்டுபோகிறவன், மனிதனுடைய நாசத்திற்கு காரணமானவன். ஆனால், இந்த இரண்டு வசனங்களில் சாத்தான்:
- கொடிய பாவியின் ஆவியை கர்த்தருடைய நாளில் இரட்சிக்க உதவுகிறவன்.
- தேவதூஷணம் பண்ணுகிறவரை சீர்திருத்த உதவுகிறவன்!
மெய்யாகவே, சகோதரா, சகோதரீ, சாத்தானயப்பற்றிய புரிந்துகொள்ளுதலில் எங்கேயோ பெரிய தவறு ஏற்பட்டுள்ளது.
சிந்தியுங்கள்!
டோம்ஸான் கட்டய்க்கல்
(தொடரும்)
