நண்பர்களே,
சாத்தான் என்கிற ஒரு நபர் இல்லை என்று நான் யாரிடமாகிலும் சொன்னால் உடனே எழும்புகிற கேளிவிகளின் மாதிரி இப்படிதான்: அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி?
எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் உரிமைபாராட்டவில்லை, எனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதி முடிக்கவும் இல்லை. கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் எல்லா “அப்படியானால்” கேள்விகளுக்கும் ஒன்றுக்கு பிறகு ஒன்றாக பதிலளிப்பேன்.
“அப்படியானால் ____ எப்படி” கேள்விகளில் ஒன்றுக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன். அந்த கேள்வியானது: “அப்படியானால், சாத்தான் ஒரு ஸ்திரீயை 18 வருஷம் கட்டியிருந்தாரே?”
சாத்தான் என்கிற வார்ததை இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான், ஆனால், இந்த வசனத்தின் சூழமைவை கவனித்தீர்களா? இந்த ஸ்த்ரீயைப்பற்றி கூறுகிற முதல் வசனம் முதற்கொண்டு கவனிப்போம்:
அந்த ஸ்திரீ பிறப்பால் கூனி அல்லது கூன் முதுகுள்ள ஸ்திரீ அல்லை. அவருக்கு ஒரு பலவீனப்படுத்தும் ஆவி இருந்ததால் அவள் நிமிரக்கூடாத நிலைமையில் குனிந்திருந்தாள்.
இங்கே ‘பலவீனப்படுத்தும் ஆவி’ (ஆங்கில வேதாகமத்தில் a spirit[G4151] of infirmity[G769]) என்கிற சொற்றொடர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. ஒருசிலர் இந்த சொற்றொடரை “பொல்லாத ஆவி” என்று எண்ணுகிறதுண்டு; ஆனால் ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G769 எண்ணுள்ள கிரேக்க வார்த்தைக்கு (astheneia) “பொல்லாத” என்கிற அர்த்தம் இல்லை. அதின் அர்த்தம் எப்பொழுதும் “நோய்” அல்லது “பிணி” என்பதே.
பொல்லாத ஆவி என்பதற்கு பொருந்தும் கிரேக்க சொற்றொடர் [G4190] - (πονηρός, ponēros) [G4151] - (πνεῦμα pneuma) என்பதே. இதை அப் 19:15, 16 வசனங்களில் பார்க்கவும்:
‘பலவீனப்படுத்தும் ஆவி’ (a spirit of infirmity) என்பதை விட ‘மன நோய்’ என்பதே பொருத்தமான மொழிபெயர்ப்பு என்றும், அந்த ஸ்திரீக்கு ஒரு மன நோய் இருந்தது என்றும் முதலிலே உங்களிடம் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
லூக் 13:11ல் இப்படி எழுதப்பட்டுள்ளது: “அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.” (She was bent over and could not fully straighten herself.)
இந்த நோய்க்கு மருத்துவ அறிவியலில் “மாற்றச் சீர்குலைவு ” (Conversion Disorder) என்று பெயர். இந்த நோய் உளச்சோர்வினால் உண்டாகிறது. நெருங்கினவர்களின் மரணம், காயப்படுதல், விபத்து போன்ற நிகழ்வுகள் மாற்றச் சீர்குலைவுக்கு காரணமாகும். யுத்தம் நடக்கும்போது பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருசில படைவீரர்கள் காயங்கள் இல்லாமலே மருத்துவமனைகளுக்கு வருவார்கள். பேசவும் நடக்கவும் முடியாமல் விறகைப் போல் இருப்பார்கள். (இந்த நோய்யைப் பற்றி தமிழில் அதிகமாக எழுதப்படவில்லை.)
சொன்னார். நீங்கள் உங்கள் பேச்சில் வழிமொழிகளை (உவமைகள், உருவகங்கள் ... figures of speech) பயன்படுத்தமாட்டீர்களா? இயேசு பரிசேயரிடம்: “குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” (மத் 23:24) என்று சொன்னதற்கு உண்மையாகவே பரிசேயர் ஒட்டகத்தை விழுங்குவார்கள் என்கிற விளக்கம் உண்டா? “உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” (மார் 9:37) என்று சொன்னதற்கு ஒரு கண் மட்டும் உள்ளவர்களும், இரண்டு கண்களும் இல்லாதவர்களும் மட்டும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று விளக்கம் இருக்குமா?
ஒருவேளை, இயேசு சாத்தான் என்கிற வார்த்தையை ஒரு வழிமொழியாக பயன்படுத்தியிருக்கக் கூடாதா? வேதத்தில் எத்தனையோ முறை வழிமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்துவதை விட கடினமான வேலை இறந்துபோனவர்களை எழுப்புவது. இறந்துபோனவர்களை எழுப்புவதற்கு தேவனுடைய ஒரே பேறான குமாரன் தேவையாயிருக்கிறதா? இயேசுவுக்கு முன் எலியாவும் (1ராஜா 17:17-24) எலிசாவும் (2ராஜா 4:35) இறந்துபோனவர்களை எழுப்பினாரே? தீர்க்கதரிசிகள் நோயாளிகளை குணப்படுத்தினாரே?
இயேசுவின் நாட்களில் யூதர்கள் தங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று உரிமைபாராட்டினார்கள். (யோவா 8:39) அல்லாமலும் அவர்கள் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் (அப் 3:25) என்று வேதம் கூறுகிறது.
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு இறந்துபோனவர்களை எழுப்பவும், நோயாளிகளை குணப்படுத்தவும் முடிந்ததே? ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் என்றும் உரிமைபாராட்டுகிற யூதர்களால் நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்த ஏன் முடியவில்லை? அல்லது அவளை குணப்படுத்த அவர்கள் ஏன் முயலவில்லை? (ஒருவேளை, உங்களால் ஒரு நோயாளியை குணப்படுத்த முடியுமா என்று என்னிடம் விசாரித்தால், முடியாது என்று பதிலளிப்பேன். ஏனெனில், உண்மையான, ஆதாரப்பூர்வமான குணப்படுத்தல்கள் நாம் உயிரோடிருக்கும் காலத்தில் நடக்கிறதில்லை.)
சாத்தான் என்கிற ஒரு நபர் இல்லை என்று நான் யாரிடமாகிலும் சொன்னால் உடனே எழும்புகிற கேளிவிகளின் மாதிரி இப்படிதான்: அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி? அப்படியானால் ____ எப்படி?
எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் உரிமைபாராட்டவில்லை, எனக்கு தெரிஞ்சதெல்லாம் எழுதி முடிக்கவும் இல்லை. கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் எல்லா “அப்படியானால்” கேள்விகளுக்கும் ஒன்றுக்கு பிறகு ஒன்றாக பதிலளிப்பேன்.
“அப்படியானால் ____ எப்படி” கேள்விகளில் ஒன்றுக்கு இந்த பதிவில் பதிலளிக்கிறேன். அந்த கேள்வியானது: “அப்படியானால், சாத்தான் ஒரு ஸ்திரீயை 18 வருஷம் கட்டியிருந்தாரே?”
லூக் 13:16 இதோ, சாத்தான் 18 வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
சாத்தான் என்கிற வார்ததை இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான், ஆனால், இந்த வசனத்தின் சூழமைவை கவனித்தீர்களா? இந்த ஸ்த்ரீயைப்பற்றி கூறுகிற முதல் வசனம் முதற்கொண்டு கவனிப்போம்:
லூக் 13:10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக் 13:11 அப்பொழுது 18 வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
லூக் 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
லூக் 13:13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
அந்த ஸ்திரீ பிறப்பால் கூனி அல்லது கூன் முதுகுள்ள ஸ்திரீ அல்லை. அவருக்கு ஒரு பலவீனப்படுத்தும் ஆவி இருந்ததால் அவள் நிமிரக்கூடாத நிலைமையில் குனிந்திருந்தாள்.
இங்கே ‘பலவீனப்படுத்தும் ஆவி’ (ஆங்கில வேதாகமத்தில் a spirit[G4151] of infirmity[G769]) என்கிற சொற்றொடர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஒரு பெரிய சிக்கலாக இருந்தது. ஒருசிலர் இந்த சொற்றொடரை “பொல்லாத ஆவி” என்று எண்ணுகிறதுண்டு; ஆனால் ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G769 எண்ணுள்ள கிரேக்க வார்த்தைக்கு (astheneia) “பொல்லாத” என்கிற அர்த்தம் இல்லை. அதின் அர்த்தம் எப்பொழுதும் “நோய்” அல்லது “பிணி” என்பதே.
பொல்லாத ஆவி என்பதற்கு பொருந்தும் கிரேக்க சொற்றொடர் [G4190] - (πονηρός, ponēros) [G4151] - (πνεῦμα pneuma) என்பதே. இதை அப் 19:15, 16 வசனங்களில் பார்க்கவும்:
அப் 19:15 பொல்லாத ஆவி (evil[G4190] spirit[G4151]) அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,
அப் 19:16 பொல்லாத ஆவியையுடைய (evil[G4190] spirit[G4151]) மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து...
வேதத்தை வாசிக்கும்போது நாம் ஒருசில உண்மைகளை நாம் மனதில் வைக்க வேண்டும்:
- மொழிகள் எப்பொழுதும் மாறுகிறது மற்றும் வளர்ச்சியடைகிறது. உதாரணமாக, கிறிஸ்துவுக்கு முன் எழுதப்பட்ட திருக்குரல் வாசிக்கிற ஒருவருக்கு திருக்குரலில் பயன்படுத்தியிருக்கும் தமிழ் மொழி உணர்ந்துகொள்வது எளிதல்ல. கலைஞ்சரைப் போல் யாரோ ஒருவர் விளக்கினால் மட்டுமே திருக்குரலின் விளக்கத்தை நமக்கு உணர்ந்துகொள்ள முடியும். மொழியும் எழுத்தும் ஒன்றுதான், ஆனால் விளக்கம் (அர்த்தம்) மாறிவிட்டது. இப்படியிருக்க, வழக்கற்றுப்போன கோய்னே கிரேக்கு (Koine Greek), எபிரேய மொழிகளில் எழுதப்பட்டுள்ள வேதத்தை 16ம் நூற்றாண்டில் அல்லது 17ம் நூற்றாண்டில் மொழிபெயர்த்தவர்களுக்கு முழுமையாக உணர்ந்துகொள்ள முடிந்திருக்குமா?
- வேதம் ஒரு விஞ்ஞான ஆய்வுக்கட்டுரை அல்லை. ஒருவேளை வேதத்தில் விஞ்ஞான ரீதியான உண்மைகள் இருக்கலாம், அனால் வேதத்தின் கவனம் விஞ்ஞானம் அல்லை.
“சாத்தானால் கட்டப்பட்ட” ஸ்திரீக்கான நோய்யின் அறிகுறிகள்.
‘பலவீனப்படுத்தும் ஆவி’ (a spirit of infirmity) என்பதை விட ‘மன நோய்’ என்பதே பொருத்தமான மொழிபெயர்ப்பு என்றும், அந்த ஸ்திரீக்கு ஒரு மன நோய் இருந்தது என்றும் முதலிலே உங்களிடம் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
லூக் 13:11ல் இப்படி எழுதப்பட்டுள்ளது: “அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.” (She was bent over and could not fully straighten herself.)
இந்த நோய்க்கு மருத்துவ அறிவியலில் “மாற்றச் சீர்குலைவு ” (Conversion Disorder) என்று பெயர். இந்த நோய் உளச்சோர்வினால் உண்டாகிறது. நெருங்கினவர்களின் மரணம், காயப்படுதல், விபத்து போன்ற நிகழ்வுகள் மாற்றச் சீர்குலைவுக்கு காரணமாகும். யுத்தம் நடக்கும்போது பெரும் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்ட ஒருசில படைவீரர்கள் காயங்கள் இல்லாமலே மருத்துவமனைகளுக்கு வருவார்கள். பேசவும் நடக்கவும் முடியாமல் விறகைப் போல் இருப்பார்கள். (இந்த நோய்யைப் பற்றி தமிழில் அதிகமாக எழுதப்படவில்லை.)
என்னுடைய நண்பர் ஒருவருக்கு ஒருமுறை அவன் அருகில் ஒரு கைக் குண்டு விடித்தபோது மாற்றச் சீர்குலைவு ஏற்பட்டது. அவனுக்கு கைகால் அசைக்க முடியவில்லை, பேச முடியவில்லை. அவன் குணப்படுவதற்கு இன்னொரு அதிர்ச்சி தேவையாயிற்று. பெங்களூரில் எங்கள் வீட்டு வேலைக்காரி தன் மகன் வெளியூரில் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டு, நடுங்கி, அவளுக்கு மாற்றச் சீர்குலைவு ஏற்பட்டது. அவளை மனநல மருத்துவரிடம் கொண்டுபோனோம். அந்த மருத்துவர் அந்த வேலைக்காரியின் சேலையைப் பிடித்து இழுக்கும் போல் காண்பித்தார். பெண்களுக்குள்ள உள்ளுணர்வின் நிமித்தம் அவள் மறுக்கத் தன் கையை அசைத்தாள். அந்நேரமே அவள் குணப்பட்டாள்.
நீங்கள் அவ்வளவு அறியப்படாத ஒருவர் என்று ஒரு நிமிடம் நினையுங்கள். குடியரசுத்தலைவர் (the president) உங்கள் ஊருக்கு வருகிறதை மக்கள் அனைவரும் மைதானத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களோ மைதானத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறீர். குடியரசுத்தலைவர் பிரசங்க மேடைக்கு வந்த உடன் தன் வலது கையை உங்கள் நேர்க்கு சுட்டி, “திரு. <<உங்கள் பெயர்>> மைதானத்தின் மூலையில் உட்கார்ந்திருக்கிறதை பார்க்கிறேன், நீங்கள் இந்த பிரசங்க மேடைக்கு வரவேண்டும்” என்று உங்களை அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு உண்டாகும் உணர்ச்சியின் வழிந்தோடுதல் எப்படியிருக்கும்? (தமிழில் திறமையுடன் விபரிக்க என்னால் இயலாது.)
இன்னும், குடியரசுத்தலைவர் அல்லை இயேசு கிறிஸ்துவே உங்களை பெயர்சொல்லி அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு அந்த செய்கை எவ்வளவு அதிர்ச்சியூட்டும்? மாற்றச் சீர்குலைவு ஏற்பட்ட அந்த ஸ்த்ரீயை இயேசு தன்னிடம் அழைத்து அவள் மேல் தன் தமது கைகளை வைத்தபோது அவளுக்கு உண்டான அதிர்ச்சி அவளுடைய நோய்யை குணப்படுத்த உதவினது என்று எண்ணுகிறேன்.
நீங்கள் அவ்வளவு அறியப்படாத ஒருவர் என்று ஒரு நிமிடம் நினையுங்கள். குடியரசுத்தலைவர் (the president) உங்கள் ஊருக்கு வருகிறதை மக்கள் அனைவரும் மைதானத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்களோ மைதானத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறீர். குடியரசுத்தலைவர் பிரசங்க மேடைக்கு வந்த உடன் தன் வலது கையை உங்கள் நேர்க்கு சுட்டி, “திரு. <<உங்கள் பெயர்>> மைதானத்தின் மூலையில் உட்கார்ந்திருக்கிறதை பார்க்கிறேன், நீங்கள் இந்த பிரசங்க மேடைக்கு வரவேண்டும்” என்று உங்களை அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு உண்டாகும் உணர்ச்சியின் வழிந்தோடுதல் எப்படியிருக்கும்? (தமிழில் திறமையுடன் விபரிக்க என்னால் இயலாது.)
இன்னும், குடியரசுத்தலைவர் அல்லை இயேசு கிறிஸ்துவே உங்களை பெயர்சொல்லி அழைத்து, உங்களை அணைத்துக்கொண்டால் உங்களுக்கு அந்த செய்கை எவ்வளவு அதிர்ச்சியூட்டும்? மாற்றச் சீர்குலைவு ஏற்பட்ட அந்த ஸ்த்ரீயை இயேசு தன்னிடம் அழைத்து அவள் மேல் தன் தமது கைகளை வைத்தபோது அவளுக்கு உண்டான அதிர்ச்சி அவளுடைய நோய்யை குணப்படுத்த உதவினது என்று எண்ணுகிறேன்.
அந்த ஸ்திரீயை சாத்தான் கட்டியிருந்தார் என்பதாகி இயேசு சொல்லவில்லையா?
சொன்னார். நீங்கள் உங்கள் பேச்சில் வழிமொழிகளை (உவமைகள், உருவகங்கள் ... figures of speech) பயன்படுத்தமாட்டீர்களா? இயேசு பரிசேயரிடம்: “குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்” (மத் 23:24) என்று சொன்னதற்கு உண்மையாகவே பரிசேயர் ஒட்டகத்தை விழுங்குவார்கள் என்கிற விளக்கம் உண்டா? “உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” (மார் 9:37) என்று சொன்னதற்கு ஒரு கண் மட்டும் உள்ளவர்களும், இரண்டு கண்களும் இல்லாதவர்களும் மட்டும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்று விளக்கம் இருக்குமா?
ஒருவேளை, இயேசு சாத்தான் என்கிற வார்த்தையை ஒரு வழிமொழியாக பயன்படுத்தியிருக்கக் கூடாதா? வேதத்தில் எத்தனையோ முறை வழிமொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது?
இதை கவனியுங்கள்:
நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்துவதை விட கடினமான வேலை இறந்துபோனவர்களை எழுப்புவது. இறந்துபோனவர்களை எழுப்புவதற்கு தேவனுடைய ஒரே பேறான குமாரன் தேவையாயிருக்கிறதா? இயேசுவுக்கு முன் எலியாவும் (1ராஜா 17:17-24) எலிசாவும் (2ராஜா 4:35) இறந்துபோனவர்களை எழுப்பினாரே? தீர்க்கதரிசிகள் நோயாளிகளை குணப்படுத்தினாரே?
இயேசுவின் நாட்களில் யூதர்கள் தங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று உரிமைபாராட்டினார்கள். (யோவா 8:39) அல்லாமலும் அவர்கள் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் (அப் 3:25) என்று வேதம் கூறுகிறது.
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளுக்கு இறந்துபோனவர்களை எழுப்பவும், நோயாளிகளை குணப்படுத்தவும் முடிந்ததே? ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரர்கள் என்றும் உரிமைபாராட்டுகிற யூதர்களால் நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீயை குணப்படுத்த ஏன் முடியவில்லை? அல்லது அவளை குணப்படுத்த அவர்கள் ஏன் முயலவில்லை? (ஒருவேளை, உங்களால் ஒரு நோயாளியை குணப்படுத்த முடியுமா என்று என்னிடம் விசாரித்தால், முடியாது என்று பதிலளிப்பேன். ஏனெனில், உண்மையான, ஆதாரப்பூர்வமான குணப்படுத்தல்கள் நாம் உயிரோடிருக்கும் காலத்தில் நடக்கிறதில்லை.)
இயேசுவின் நாட்களில் யூதேயாவில் மாண்புமிக்கவர்களும் அறிஞர்களும் இருக்கவில்லையா? காய்பா, அன்னா, நிக்கொதேமு, கமாலியேல் போன்றவர்கள் இருந்தார்களே? அவர்களுக்கு அந்த ஸ்திரீயை ஏன் குணப்படுத்த முடியவில்லை? அவர்கள் முயற்சி செய்திருப்பாரா?
யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் எழைகள் கீழ்த்தரமானவர்களாக எண்ணப்பட்டிருந்தது என்று தோன்றுகிறது. (யாக் 2:2; லூக் 18:10-14 காணவும்). ஒருவேளை அந்த நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீ வழக்கமாக ஜெப ஆலயத்தின் மூலையில் எங்கேயோ உட்கார்நதிருக்கலாம். ஒருவேளை, ஜெப ஆலயத்தின் மூப்பர்கள் அவள்மேல் அக்கறை காட்டியிருந்தால், அவள் 18 ஆண்டுகளாக கஷ்டப்பட தேவையில்லையே.
அந்த ஸ்திரீக்கு நல்லதைச் செய்ய அவர்களு தடையாக நின்றது எதுவோ அது தான் சாத்தான் என்பதே என் கருத்து. அவர்களுடைய மதத்தின் மேட்டிமையோ, ஆணவமோ அதற்கு காரணமாக இருக்கலாம்.
சாத்தான் என்கிற வார்த்தைக்கு எதிர்கிற(வன்), விரோதி அல்லது மறுக்கிற(வன்) என்று விளக்கம். இப்பொழுது இந்த வசனங்களை கவனமாக வாசியுங்கள்:
தேவனுக்கு சித்தமாயிருந்தால் புதிய ஏற்பாடில் சாத்தான் என்கிற வார்த்தை முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களின் மதத்தை சுட்டிக்காட்டுகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வேன்.
நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீக்கான நோய்யின் அறிகுறிகள் மாற்றச் சீர்குலைவின் அறிகுறிகளே. மாற்றச் சீர்குலைவு ஒரு உளவியல் கோளாறு; சரியான சிகிச்சை மூலம் மாற்றச் சீர்குலைவை குணப்படுத்த முடியும். அந்த கோளாறு ஒருவருக்கு ஏற்பட சாத்தான் அல்லது பேய் தேவையில்லை. சாத்தான் என்கிற வார்த்தை வழிமொழியாக பயன்படுத்தியிருக்கலாம், அல்லது யூதர்களின் மதத்தை மறைமுகமாக சுட்டிக்காட்ட பயன்படுத்தியிருக்கலாம்.
யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் எழைகள் கீழ்த்தரமானவர்களாக எண்ணப்பட்டிருந்தது என்று தோன்றுகிறது. (யாக் 2:2; லூக் 18:10-14 காணவும்). ஒருவேளை அந்த நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீ வழக்கமாக ஜெப ஆலயத்தின் மூலையில் எங்கேயோ உட்கார்நதிருக்கலாம். ஒருவேளை, ஜெப ஆலயத்தின் மூப்பர்கள் அவள்மேல் அக்கறை காட்டியிருந்தால், அவள் 18 ஆண்டுகளாக கஷ்டப்பட தேவையில்லையே.
அந்த ஸ்திரீக்கு நல்லதைச் செய்ய அவர்களு தடையாக நின்றது எதுவோ அது தான் சாத்தான் என்பதே என் கருத்து. அவர்களுடைய மதத்தின் மேட்டிமையோ, ஆணவமோ அதற்கு காரணமாக இருக்கலாம்.
சாத்தான் என்கிற வார்த்தைக்கு எதிர்கிற(வன்), விரோதி அல்லது மறுக்கிற(வன்) என்று விளக்கம். இப்பொழுது இந்த வசனங்களை கவனமாக வாசியுங்கள்:
1தெச 2:14 எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.
1தெச 2:15 அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
தேவனுக்கு சித்தமாயிருந்தால் புதிய ஏற்பாடில் சாத்தான் என்கிற வார்த்தை முதல் நூற்றாண்டிலிருந்த யூதர்களின் மதத்தை சுட்டிக்காட்டுகிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வேன்.
முடிவுரை:
நிமிரக்கூடாத கூனியான ஸ்திரீக்கான நோய்யின் அறிகுறிகள் மாற்றச் சீர்குலைவின் அறிகுறிகளே. மாற்றச் சீர்குலைவு ஒரு உளவியல் கோளாறு; சரியான சிகிச்சை மூலம் மாற்றச் சீர்குலைவை குணப்படுத்த முடியும். அந்த கோளாறு ஒருவருக்கு ஏற்பட சாத்தான் அல்லது பேய் தேவையில்லை. சாத்தான் என்கிற வார்த்தை வழிமொழியாக பயன்படுத்தியிருக்கலாம், அல்லது யூதர்களின் மதத்தை மறைமுகமாக சுட்டிக்காட்ட பயன்படுத்தியிருக்கலாம்.
கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

