புதன், 31 ஆகஸ்ட், 2016

மத்தேயு 24, உலகத்தின் முடிவு - பகுதி #1 (எத்தனை கேள்விகள்?)

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,


காலையில் 8 மணியாயிற்று. குழந்தகளை பள்ளிக்கு எடுத்துசெல்லவேண்டும் வேன் இன்னும் வரவில்லை. நீங்கள் உங்களுக்கு தெரிஞ்ச ஓர்  ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணி: “தம்பீ, என் வீட்டுக்கு வந்து, குழந்தைகளை எடுத்து, பள்ளிக்குச் செல்வாயா?” என்று கேட்டால், அந்த கேள்வியில் இருக்கும் 3 சொற்றொடர்களும் ஒரே காலத்தில், தொடர்ச்சியாக நடக்கவேண்டுமா, அல்லது:
  1. இப்போதே வந்து,
  2. நாளைக்கு குழந்தைகளை எடுத்து,
  3. அடுத்த வாரம் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா?
நீங்கள் கேட்ட கேள்விக்குள் இருக்கும் நிகழ்வுகள் வேறுவேறு காலங்களில் நடக்க வேண்டும் என்கிற அர்த்தம் இல்லையென்றால், இயேசுவின் சீடர்கள் கேட்ட இதைப்போன்ற ஒரு கேள்விக்குள் இருக்கும் நிகழ்வுகள் வேறுவேறு காலங்களில் நடக்க வேண்டும் என்கிற அர்த்தம் எப்படி உண்டாயிற்று?
மத் 24:3 பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து:
  1. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?
  2. உம்முடைய வருகைக்கும்,
  3. உலகத்தின் முடிவுக்கும்
அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.”
இந்த ஒரே கேள்வியை மூன்று பகுதிகளாக பகுத்து விளக்கம் கூறுபவர்கள் அவர்களுடைய வாழ்கையில் ஒருபோதும் இதே விஷயங்கள் மாற்கு 13லும், லூக்கா 21லும் எப்படி எழுதப்பட்டுள்ளது என்பதை கவனிக்கவில்லை! அந்த இரணடு அதிகாரங்களிலும் மத்தேயு 24:3ல் உள்ளது போல மூன்று சொற்றொடர்கள் இல்லை!
மாற் 13:4
  1. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்?
  2. இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன?
    எங்களுக்குச் சொல்லவேண்டும்” என்றார்கள்.
லூக் 21:7 அவர்கள் அவரை நோக்கி: “போதகரே,
  1. இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்,
  2. இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன?
என்று கேட்டார்கள்.
மாற்கு 13, லூக்கா 21 என்கிற அதிகாரங்களுக்கும் மத்தேயு 24க்கும்  தொடர்பில்லை என்கிறீர்களா? இந்த 3 அதிகாரங்களையும் இணைத்து வாசியுங்கள்.

இயேசு கிறிஸ்துவுக்குள் அன்பான  சகோதரா, சகோதரி, சீடர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வியில் இருக்கும் நிகழ்வுகள் ஒரே காலத்தில் நடக்கவேண்டியது. அந்த நிகழ்வுகள் மத்தியில் இடைவெளிகளுக்கு வாய்ப்பில்லை.

மாற்குவின் சுவிஷேம் தான் முதல்முதலாக எழுதப்பட்டது என்று பெரும்பாலும் வேத அறிஞர்கள் கூறுவதுண்டு. மாற்குவின் சுவிஷேத்தின் அடிப்படையில் தான் மத்தேயு தன் சுவிஷேத்தை எழுதினாராம். அப்படியானால், ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றியும் முடிவெடுக்கும் முன் மாற்குவின் சுவிஷேத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டாவா? ஏன் முடிவுகாலத்தின் விஷயத்தில் யாரும் மாற்குவின் சுவிஷேத்தில் எழுதப்பட்டுள்ளதை கவனிக்கிறதில்லை? காரணம் மிகவும் எளிது: அவர்களின் சபையின்/மதப்பிரிவின் கோட்பாடுகள் மத்தேயு 24:3ல்  கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் மூன்று வேறுவேறு காலத்தில் நடக்கவேண்டியது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு யேசுவை விட, வேதத்தை விட அவர்களுடைய சபையின்/மதப்பிரிவின் கோட்பாடுகள் தான் முக்கியம்!

[கர்த்தருக்கு சித்தாமானால் அடுத்த பதிவில்: “இவைகளெல்லாம்” என்பதில் உட்கொண்டிருக்கிறது என்பதை கவனிப்போம். ]
கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டய்க்கல்