சனி, 7 பிப்ரவரி, 2015

உண்மையாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டாரா? (பகுதி #3)

நண்பர்களே,

இந்த பதிவை வாசிக்கும்முன் இந்த தொடரின் #1, #2 பகுதிகளை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மனிதர்களை குறைத்து எடைபோடாதீர்கள், அவர்கள் தேவனையே சோதித்தவர்கள்.


  • எபி 3:8 வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.
  • எபி 3:9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, 40 வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள்.
இஸ்ரவேல் மக்கள் சர்வவல்லமையுள்ள தேவனை சோதித்ததும் பரீட்சைபார்த்தது ஒருவிசை அல்லை, இரண்டுவிசை அல்ல, எகிப்திலிருந்தும் புறப்பட்ட கொஞ்சம் காலத்துக்குள் 10 விசை சோதித்தார்கள்::
  • எண் 14:22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே 10 முறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும்,
இந்த வசனம் எழுதப்பட்ட பிறகு எத்தனை விசை தேவனை சோதித்தார்கள் என்பதற்கு கணக்கு இல்லை.. குடிக்கத் தண்ணீர் இல்லாவிட்டால் தேவனை சோதிப்பார்கள், சாப்பாடு இல்லாவிட்டால் தேவனை சோதிப்பார்கள், சாப்பாடு கிடைத்தால், கிடைத்த உணவுக்கு சுவையில்லை என்று தேவனை சோதிப்பார்கள்...

ஆவிக்குரிய நிலைமையில், கண்ணுக்கெட்டாதவராக இருக்கிற தேவனை சோதிப்பதற்கு மனிதர்களாலே கூடுமானால், பூமியில் நம்மைப் போல் சதையும் எலும்புமாக பிறந்த அவருடைய குமாரனாகிய இயேசுவை சோதிக்கிறதற்கு வேறொருவர் தேவைப்படுவாரா? யோசித்துபாருங்கள்..

உணவுபொருளை பற்றிய் சோதனை (மத் 4:3)


எங்கள் சபையில் மாதத்துக்கு ஒருமுறை மாநாடு நடக்கும். காலையுணவு சாப்பிட்டுவிட்டு போதகர்கள் சொல்வதைக் கவனமாக கேட்டுகொண்டே இருப்பார்கள் சபையார் அனைவருக்கும். ஏறத்தாழ 12 மணியாகும்போது அருகில் உள்ள கொட்டகையிலிருந்து பிரியாணியின் நறுமணம் வரத்தொடங்கும், அப்பொழுது அனைவருடை கவனமும் போதகர் சொல்லும் வார்த்தைகளில் இராமல், பிரியாணி கொதித்துகொண்டிருக்கும் கொப்பரைக்குள் அமிழ்ந்திருக்கும். இங்கே அவர்களை சோதிக்க சாத்தான் வருவாரா? இல்லை, வருகிறது பிரியாணியின் நறுமணம் மட்டும்தான். பசியெடுக்கத் தொடங்கின வேளையில் சாப்பாட்டின் நறுமணம் அவர்களை அடிமைப்படுத்துகிறது. உடலின் பலவீனம்!!

காலையுணவு சாப்பிட்ட மனிதர்களுக்கே இவ்வளவு பலவீனமிருந்தால், உபவாசமாக இருக்கிறவர்களுக்கு எவ்வளவு பலவீனம் இருக்கும்? அதுவும் அப்படி உபவாசமாக இருக்கிறவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்பதை மறவாதீர்கள். தான் என்னத்தைச் செய்ய நினைத்தாலும் அது நடக்கும் என்று அவருக்கு தெரியாதா? அவர் மரித்தவர்களை உயிரோடே எழுப்பினவர், 5 அப்பங்களை 5000 ஆக்கினவர். கற்களை அப்பமாக மாற்றுகிறது அவருக்கு எளிது.

நீங்கள் ஒரு பெரிய பதவியில் இருக்கிறீர்கள் என்று ஒரு நிமிடம் கற்பனை செய்யுங்கள். உங்களுக்கு கொஞ்சம் பணம் தேவையாக இருக்கிறது. உங்கள் அலுவலகத்திலிருந்தும் தேவையான பணம் எடுத்துக்கொண்டாலும் யாருக்கும் தெரியாது. அப்படி எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் உங்களுக்கு எவ்வளவு மனவுறுதி தேவையாக இருக்கும்?

இயேசுக்கு அவர் என்ன நினைத்தாலும் அது நடக்கும் என்கிற விழிப்புணர்வு இருந்திருக்காதா? கண்டிப்பாகவே இருந்திருக்கும். தனக்கு இருக்கும் வல்லமையை தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கிறதை விட பெரிய சோதனை எதுவும் இல்லை. அதனாலே தான் வெளிப்படுத்தல் 2, 3 அதிகாரங்களில் ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு மிகப்பெரிய வெகுமதி அளிக்கப்படும் என்று 7 முறை கூறப்பட்டுள்ளது. (வெளி 2:7, 11, 17, 26; 3:5, 12, 3:21 காணவும்)

உணவுபொருளின் விஷயத்தில் இயேசுவை சோதித்தது சாத்தான் மட்டுமல்லை!


ஒருவிசை கப்பர்நகூம் மனிதர்கள் இயேசுவிடம்:
  • யோவா 6:30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்?
  • யோவா 6:31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள்.
நேரடியாக எங்களுக்கு அப்பத்தைக் கொடும் என்று சொல்லாமல், அவர் ஒரு அடையாளம் கேட்ட பிறகு, மன்னாவைப்பற்றி மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சோதனைக்காரன்:


  • மத் 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
உங்களுக்கு சோதனைகள் உண்டானபோதெல்லாம் யாரோ ஒரு சோதனைக்காரன் உங்கள் முன் வந்து நின்றாரா? (எபி 4:15). இயேசு தேவனுடைய குமாரன் என்று சாத்தனுக்கு மட்டும் தெரிந்திருந்ததா? வேறு யாருக்கும் தெரியாதா? இயேசு யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றபொது வானத்திலிருந்து உண்டான சத்தத்தை (மத் 3:17) கேட்ட வேறு யாராகிலும் இதே கேள்வியை இயேசுவிடம் கேட்டிருக்கக்கூடாதா?

இத்தகைய இன்னொரு வசனம்:
  • மத் 27:40 தேவாலயத்தை இடித்து, 3 நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.
இந்த சவாலை இயேசுவிடம் கேட்க ஒரு மனிதனுக்கு கூடுமானால் ஏன் மேலே சொல்லப்பட்ட (மத் 4:3) கேள்வியை ஒரு மனிதனால் கேட்க முடியாது?

மத் 4:3ல் சோதனைக்காரன் என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை peirazō (ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G3985). இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனம்:
  • யாகோ 1:14 அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (G3985).
பட்டினியிருக்கிறவனுக்கு இச்சை சாப்பாட்டின் மேல் இருக்கும், அவனை சோதிக்க வேறே யாரும் தேவையில்லை.

இப்பகுதியின் முடிவுரை:


  • உணவின் விஷயத்தில் ஒருவரை சோதிக்க மனிதர்கள் போதும், சாத்தான் தேவையில்லை.
  • மனிதர்களுக்கு சர்வவல்லமையுள்ள தேவனையே சோதிக்ககூடும் என்றால், அவருடைய குமரனை சோதிப்பது மிகவும் எளிது.
  • உணவுபொருட்களின் விஷயத்தில் இயேசுவுக்கு பலமுறை சோதனைகள் ஏற்பட்டிருக்கலாம், அப்பொழுதெல்லாம் சாத்தான் அவர் முன் வந்து நின்றிருக்க வாய்ப்பில்லை.
தொடரும்...
டோம்சான் கட்டக்கல்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

உண்மையாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டாரா? (பகுதி #2)

நண்பர்களே,

இந்த பதிவை வாசிக்கும்முன் இதின் முதல் பகுதியை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

சாத்தானை பற்றிய முன்னெண்ணங்கள்.


சாத்தான் அல்லது பிசாசு என்று கேட்டவுடன் பெரும்பாலானோருக்கு கொம்பும், வாலும் உடைய திரிசூலம் பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு உருவம்தான் மனதில் வருகிறது.

இயேசு தனக்கு ஏற்படவேண்டிய பாடுகளைப் பற்றி சீடர்களிடம் கூறினபோது பேதுரு என்ன சொன்னார் என்பதையும் அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதையும் கவனியுங்கள்:
  • மத் 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
  • மத் 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
இங்கே இயேசு பேதுருவை சாத்தானே என்று கூப்பிட்டபோது பேதுருவுக்கு கொம்பு முளைத்ததா? வால் வளர்ந்ததா? அப்படியெல்லாம் நடக்கவில்லையே? இயேசு இங்கே கூறினது பேதுரு சாத்தான் ஆகிவிட்டார் என்று அர்த்தம் அல்ல, மாறாக பேதுருவின் எண்ணங்கள் தேவனுக்கு ஏற்றவைகளாக இராமல், மனிதனுக்கு ஏற்றவைகளாக இருக்கிறது என்பதே.

அதே போல, சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான் என்று கூறப்பட்டதின் விளக்கம் கொம்பும் வாலும் உடைய ஒரு நபர் யூதாசின் உடம்பிலுள்ள ஏதோவொரு பிளவு வழியாக உட்புகுந்தார் என்பதா?
  • லுக் 22:3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
இல்லை, அவனுக்கு தேவனுக்கு ஏற்ற எண்ணங்கள் இல்லாமல், மனிதனுக்கடுத்த எண்ணங்கள் உண்டாயிற்று என்பதே அதின் விளக்கம்.

வேறு வகையில் கூறினால்: சாத்தான் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டதினால் மட்டும் ஒருவர் சாத்தான் அல்லது பிசாசாக மாறப்போவது இல்லை.
தொடரும்...

டோம்சான் கட்டக்கல்

உண்மையாகவே இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டாரா? (பகுதி #1)

நண்பர்களே,

[எச்சரிக்கை: தமிழ் என் தாய்மொழி அல்லை, தமிழ் என் பாட்டி மொழி.]

சாத்தான் என்கிற ஒரு நபர் இல்லை என்று ஒரு கிறித்தவனிடம் சொன்னால் உடனே அவர் கேட்கிற கேள்வி இதுவே: "அப்படியானால், இயேசு சாத்தானால் சோதிக்கப்படவில்லையா?"

யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட இயேசுவை அதே பரிசுத்த ஆவி பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்குக் கொண்டுபோனார்:
  • மத் 4:1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
வனாந்தரத்திலிருந்தும் அவரை திரும்பக் கூட்டிக்கொண்டு வந்ததும் பரிசுத்த ஆவிதான்:
  • லுக் 4:14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்.
அதாவது, வனாந்தரத்தில் இயேசு செலவிட்ட 40 நாட்களும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பில் இருந்தார். அவருக்கு அளவில்லாமல் அளிக்கப்பட்டிருந்த பரிசுத்த ஆவி (யோவா 3:34) அவரை விட்டுவிலகிப் போனதுண்டா?

இயேசு எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார்...

கவனமாக வாசியுங்கள்:
  • எபி 4:15 நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
இயேசு எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டிருக்கும்போது, உங்களுக்கு சோதனை ஏற்ப்பட்டபோதெல்லாம் சாத்தான் அல்லது பிசாசு என்கிற கொம்பும், வாலும் உடைய ஒரு உருவம் திரிசூலத்தைப் பிடித்துக்கொண்டு உங்கள் முன்நிலையில் நின்றுக்கொண்டிருந்தாரா?

வேறு வகையில் கூறினால்  உங்களுக்கு ஏற்ப்படாத ஒருவிதமான சோதனையும் இயேசுவுக்கு ஏற்ப்படவில்லை.

பரிசுத்த ஆவி உங்களை எங்கு வழிநடத்துவார்?



பரிசுத்த ஆவி இயேசுவை சாத்தானால் சோதிக்கப்படுவதற்கு வனாந்தரத்திற்கு கூட்டிக்கொண்டுபோனார் என்று எழுதப்பட்டுள்ளது, அப்படியானால், பரிசுத்த ஆவி உங்களை எங்கு வழிநடத்துவார்? சாத்தானிடத்திற்கு வழிநடத்துவாரா? அப்படி வேதம் கூறுகிறதுண்டா?
  • யோவா 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
தேவனுடைய ஒரே பேறான குமாரனையே சாத்தானால் சோதிக்கப்படுவதற்காக வனாந்தரத்துக்கு கூட்டிக்கொண்டுபோன பரிசுத்த ஆவி, உங்களை அப்படி பண்ணமாட்டார் என்பதற்கு எதாவது உத்தரவாதம் இருக்கிறதா?

இயேசுவின் காலத்தில் பூமி தகடு (தட்டு) போல் இருந்ததா?


  • மத் 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
பூமி ஒரு உருண்டை என்பதற்க்கு விவாதம் எதுவும் இல்லை (பூமி உருண்டை அல்ல என்று அடம்பிடிக்கிற கிறித்தவர்களும் உண்டு.) பூமியின் ஆரம் 6371 கி.மி. பூமியிலேயே மிக உயர்ந்த மலை எவரெஸ்ட், அதின் உயரம் 14:16 கி.மி. 


6371 கி.மி. ஆரமுடைய பூமி என்கிற உருண்டையின் மேல் இருக்கும் 14:16 கி.மி உயரம் மட்டுமுள்ள எவரெஸ்ட் மலையின் மேல் ஏறினாலும் உலகத்திலுள்ள சகல ராஜ்யங்களையும் பார்க்கக்கூடுமா? எவரெஸ்ட் மலையை விட உயரமுள்ள மலை எருசலேமின் அல்லது இஸ்ரவேலின் சுற்றுப்புறங்களில் இருக்கிறதா? இருந்ததா? ஒரு செயற்கைக்கோளில் (satellite) ஏறினாலும் “ஒரு நிமிஷத்திலே” உலகத்தின் சகல இராஜ்யங்களையும் காண்பிக்கக்கூடுமா?

இந்த கேள்வியை உங்கள் போதகரிடம் கேட்டால்: "இல்லை, அப்படியல்ல, இந்த நிகழ்வு சொல்லுக்குச்சொல், நடக்கவில்லை, அது ஆவிக்குரிய அல்லது அடையாளமாக விளக்கமுடையது" என்று சொல்வார்கள். அதையே தான் நானும் சொல்கிறேன். அதைச் சொல்வதற்கு 5 வருடம் வேதாகம கல்லூரியில் படிக்கத் தேவையில்லை, பகுத்தறிவு இருந்தாலே போதும்.

40 நாள் பட்டினியிருந்த ஒருவரால் மலை ஏற முடியுமா? 100 கி.மி. நடக்க முடியுமா?


இயேசு ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட யோர்தானிலிருந்தும் தெற்குள்ள வனாந்தரத்துக்கு ஏறத்தாழ 32 கி. மி தூரம் இருக்கிறது. எருசலேமுக்கு கிட்ட இருக்கும் மிகப்பெரிய மலை எர்மோன் (உயரம் 2813 மீட்டர் அல்லது 2.8 கி. மி.), எருசலேமுக்கும் வடக்கு திசையில் உள்ள எர்மோன் வரைக்கும் இடையில் உள்ள தூரம் 113 கி. மி. அதாவது வனாந்தரத்திலிருந்து எர்மோன் வரைக்கும் ஏறத்தாழ 145 கி. மி. தூரம்.

இயேசுவின் காலத்தில் பேருந்துகளோ, ரயில் வண்டிகளோ இருக்கவில்லை. அப்படியிருக்க, 40 நாள் பட்டினியிருந்த ஒருவருக்கு 145 கி. மி. நடந்துபோய், 2.8 கி. மி. உயரமுடைய எர்மோன் மலை ஏறமுடியுமா?

3 நாள் பட்டினியிருந்த ஒருவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியுமா? தாவீது அரசனாகும் முன் நடந்த இந்த நிகழ்வை கவனியுங்கள்:
  • 1சாமு 30:11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
  • 1சாமு 30:12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
தாவீதின் வேலைக்காரர்கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகுதான் மூன்றே மூன்று நாள் பட்டினியிருந்த அந்த எகிப்தியனுடைய உயிர் அவனுக்குள் திரும்பிவந்ததாம், அப்படியிருக்க 40 நாள் பட்டினியிருந்த இயேசுவின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்பதை யோசியுங்கள்.

இயேசு 40 நாள் பட்டினியிருந்த பிறகு கலிலேயாவுக்குத் திரும்பிப் போகும் முன் அவர் பட்டினியாகவே போனாரா? இல்லை:

  • மத் 4:11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். (angels came and ministered unto him)/

பணிவிடை செய்தார்கள் என்றால் விசிறி வீசினார்கள் என்று அர்த்தமா? இல்லை, 40 நாள் பட்டினியிருந்த அவருக்குக் குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் அளித்தார்கள்.

தேவாலயம் எருசலேமில் இருந்ததா? அல்லது வனாந்தரத்தில் இருந்ததா?


இயேசு 40 நாள் வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்பட்டுகொண்டிருந்தார், அல்லவா? வனாந்தரத்தில் இருக்கையில் பிசாசு இயேசுவை எருசலேமிலுள்ள தேவாலயத்துக்கு கூட்டிக்கொண்டுவந்து அதன் உச்சியில் நிற்கவைத்தானாம்!!
  • மத் 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
  • லுக் 4:9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக் குதியும்.
வீரப்பன் உயிரோடிருந்த காலத்தில் நீங்கள் கோவை அல்லது சென்னை பட்டணத்தின் சாலைகலில் வீரப்பனோடு கூட நடந்துபோனீர்கள் என்று செய்து பாருங்கள். அந்த நிகழ்வை தமிழ்நாட்டில் உள்ள யாராகிலும் மறக்க முடியுமா? நீங்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் மக்கள் அனைவரும் அதைப்பற்றிச் சொல்லியே உங்களை கேளிபண்ணுவார்கள். காவல்துறை அதிகாரிகள் உங்களை சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.

அப்படியிருக்க, ஏராளமான எதிரிகள் இருந்த இயேசு, எருசலேம் பட்டணத்தின் சாலைகள் வழியாக கொம்பும், வாலும் உடைய சாத்தானோடு கூட நடந்து தேவாலயத்துக்கு போனதுண்டானால், பரிசேயர்களும், ஆசாரியர்களும் இவன் சாத்தானோடு கூட காணப்பட்டான் என்று அவர் மேல் குற்றம் சாட்ட மாட்டார்களா? ஒருவேளை இயேசு இரவில் சாத்தானோடு கூட எருசலேமுக்கு வந்திருந்தால் தேவாலயம் இரவில் திறந்திருக்குமா? யாரும் அவரை பார்த்திருக்க மாட்டார்களா? இயேசுவை விசாரணை செய்த வேளையிலாவது இயேசு சாத்தானோடு கூட எருசலேமின் தெருக்களில் காணப்பட்டார் என்று சான்றளிக்க ஏன் யாரும் இருக்கவில்லை? (மத் 26:60,61)

இந்த கேள்விகளை உங்கள் பாஸ்டர் அல்லது போதகரிடம் கேட்டுப்பாருங்கள், அப்பொழுதும் இல்லை, இந்த நிகழ்வு சொல்லுக்குச்சொல் நடக்கவில்லை என்று பதிலளிப்பார்கள். அதைத் தானே நானும் சொல்கிறது? இந்த நிகழ்வும் சொல்லுக்குச்சொல் நடக்கவில்லை. அது உங்கள் போதகருக்கு பகுத்தறிவு இருப்பதால் தெரியும், அனால், தெரிந்த உண்மையை உரக்கச்சொன்னால் அவர்களுக்கு சபையில் இருக்கும் வேலை போய்விடும்!

கற்களை அப்பங்களாக்க வேண்டும் என்கிற சோதனை.


  • மத் 4:2 அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்த பின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 
  • மத் 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 
ஒருவர் உபவாசம் இருந்தால் அவருக்கு முதல் இரண்டு, மூன்று நாட்களில் உண்டாகுமளவுக்கு பசி 10-15 நாட்களுக்கு அப்புறம் இராது. 20 நாட்களுக்கு அப்புறம் பசியே இராது. 40 நாட்கள் பசியாக இருந்த ஒருவர் நேரடியாக உணவு சாப்பிட்டால் அது உடம்புக்கு பெரிய கேடு உண்டாக்கும், ஒருவேளை மரணமும் ஏற்படலாம். அதினாலே தான் உபவாசத்தை முடிக்கும்போது எலுமிச்சை சாறு அல்லது குளுக்கோஸ் (glucose) கலந்த நீரைக் குடித்து முடிக்கிறார்கள்.

பரிசுத்த ஆவியையும் பகுத்தறிவையும் அளவில்லாமல் பெற்றிருந்த இயேசுவை 40 நாள் பட்டினியிருந்த பிறகு சாப்பாட்டின் விஷயத்தில் சோதிக்கிறது எளிதல்லை. சோதிக்கவேண்டுமானால் உபவாசத்தின் முதல்நாட்களில் சோதிக்கிறது மிகவும் எளிது. 

அந்த 40 நாட்களுக்கு பிறகு சாத்தான் இயேசுவை சோதிக்கவில்லையா?

இல்லை என்பார்கள், பெரும்பாலும் கிறித்தவர்களும், போதகர்களும், ஆனால், வேதம் என்ன கூறுகிறது என்பதை கவனிப்போம்:

லுக் 4:13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

"சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்" என்பதன் அர்த்தம் என்றென்றைக்குமாக விட்டு விலகிப்போகவில்லை என்பதுதான்.

இரண்டாம் பகுதியில் தொடர்ந்து வாசிக்கவும்...

டோம்சான் கட்டக்கல்

திங்கள், 2 பிப்ரவரி, 2015

சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது என்பதின் விளக்கம் என்ன?

நண்பர்களே,

[தமிழ் என் தாய்மொழி அல்லை, என் பதிவுகளில் எதாவது இலக்கணப்பிழை அல்லது எழுத்துப்பிழை கண்டுவந்தால் பரிவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்.]

இந்த பதிவை வாசிக்கும்முன் "சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பதினாலே கொடிய பாவியின் ஆவியை இரட்சிக்கமுடியுமா?" என்கிற பதிவை வாசிக்கவேண்டும் என்று உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது என்பதின் விளக்கம் என்ன?

சாத்தனுக்கு ஒப்புக்கொடுக்கிரதற்கேற்ற மந்திரங்களோ, ஜெபங்களோ இல்லை என்பதை பார்த்தோம். அப்படியானால், ஒரு கொடிய பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கிறது எப்படி?

உங்கள் மத்தியில் சகோதரர்களுக்குள் எதோ ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்று இயேசு சொன்னார் என்பதை முதலாவதாக பார்ப்போம். மத்தேயு 18:15-20 கவனமாக வாசியுங்கள். அங்கே கூறப்பட்டுள்ள விஷயம் இரண்டு சகோதரர்கள் மத்தியில் உண்டாகும் பிரச்சினைகள். ஒரு பிரச்சினை உண்டானால் என்ன பண்ணவேண்டும் என்பதைப்பற்றி இயேசு:

  1. அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். (மத் 18:15)
  2. அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத் 18:16)
  3. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் (heathen man - KJV, புறஜாதியான்) ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக. (மத்18:17)
சபைக்கு செவிகொடதவன் புறஜாதியான் அல்லது ஆயக்காரன் போல கணிக்கப்படவேண்டும் என்றால் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும் என்று விளக்கம். அப்பொழுதான் அவன் உனக்குபுறஜாதியான் அல்லது ஆயக்காரன் போல இருப்பான். ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறது முடியுமளவுக்கு தவிர்க்கவேண்டும். ஆதலாலேயே முதலாவதாக அவனிடம் நேரடியாக பேசவேண்டும் என்று இயேசு கூறினார். அவனிடம் நேரடியாக பேசும்போது அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய் என்பதின் விளக்கம் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிற சூழ்நிலையைத் தவிர்க்கலாம் என்பதே.

ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றி கூறின பிறகு இயேசு இப்படி சொன்னார்:
  • பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத் 18:18)
அதாவது, சபையின் தீர்மானம் மாற்றமில்லாத, கடைசி தீர்மானமாக விளங்கும்.
  • மத் 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  • மத் 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
இந்த சூழமைவு ஜெபம் பண்ணுகிறதைப் பற்றி அல்லை, இங்கே விபரிக்கப்படுகிற விஷயம் ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றியே. சபையில் உள்ளவர்கள் ஒருமனப்பட்டு கைக்கொள்ளும் தீர்மான்கள் யாவும் தேவனால் ஒப்புக்கொள்ளப்படும், ஏனெனில், இப்படிப்பட்ட முடிவெடுக்க சபையாக கூடிவரும்போது அந்த கூட்டத்தின் நடுவில் ஆவிக்குரிய நிலைமையில் கிறிஸ்து இருப்பார். (கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார், நீங்கள் அவருடைய நாமத்தில் கூடிவரும்போது கிறிஸ்து உங்களோடே இருப்பார், ஏனெனில் நீங்கள் ஒரே ஆவியை உடையவர்கள்).

மத் 18:15-20ன் முக்கிய கருத்துக்கள் எவைகள் என்றால்:
  • சபைக்குள் பிரச்சினைக்கு காரணமான ஒருவனை வெளியேற்றுகிறது.
  • அப்படிப்பட்ட தீர்மானம் கைக்கொள்ளும்போது இயேசு ஆவிக்குரிய நிலைமையில் அங்கே இருப்பார் என்பது.
  • சபையின் தீர்மானம் மாற்றமில்லாததும், தேவனால் ஒப்புக்கொள்ள தக்கதுமாக இருக்கிறது.

1 கோரி 5 கொடும்பாவியான ஒருவனை சபையிலிருந்தும் வெளியேற்றுகிறதைப் பற்றியே!


மத்தேயு 18:15-20ல் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் 1 கோரி 5ல் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது பெரும்பாலும் கிறித்தவர்களுக்கும் தெரியாது. மத்தேயு 18 சபையில் பிரச்சினை உண்டாக்குகிறவனைப் பற்றி கூறும்போது, 1 கோரி 5 கொடும்பாவியை எப்படி கையாளவேண்டும் என்று கூறுகிறது.

இந்த வசனங்களை ஒப்பிட்டு பாருங்கள்:
  • மத் 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
  • 1கோரி 5:4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நாமத்தில் - In the name of our Lord Jesus Christ - KJV) அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
மத்தேயு 18 சபையில் பிரச்சினை உண்டாக்குகிறவனை வெளியேற்ற வேண்டும் என்று கூறும்போது 1 கோரி 5 கொடும்பாவியை சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று கூறுகிறது. இவ்விரண்டும் ஒன்றுதான்.

1 கொரி 5ன் சூழமைவு:

கொரிந்த சபையில் ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்தான்.
  • 1கொரி 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் (புரஜாதியாருக்குள்ளும் - among the Gentiles) சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
யூதர்கள் பொதுவாக முறைகேடான பாலீடுபாடு (incestuous relationship) கொள்வதில்லை, ஏனெனில் நியாயப்பிரமாணம் அப்படிப்பட்ட ஈடுபாடுகளை மறுக்கிறது (லேவி 18:8). பவுல் கூறுகிறது என்னவென்றால், புரஜாதியாருக்கும் கூட அப்படிப்பட்ட ஈடுபாடுகள் கேவலமாக இருக்கிறது என்பதே.

  • 1கொரி 5:2 இப்படிப்பட்ட காரியம் செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

பவுல் கூறுகிறது என்னவென்றால் இப்படிப்பட்ட முறைகேடான பாலீடுபாடு கொண்டவனை சொரிந்த சபையாளர் அவர்களை விட்டு நீக்கவேண்டியிருந்தது அல்லது வெளியேற்றவேண்டியிருந்தது, அனால் அவர்கள் அதை செய்யவில்லை.

ஆதலால், பவுல் செய்கிற தீர்ப்பு என்னவென்றால்:

  • 1கொரி 5:3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறது போல,
  • 1கொரி 5:4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
  • 1கொரி 5:5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புச்செய்கிறேன்.
கொரிந்த சபையாளர்கள் பண்ணாமலிருந்ததை பவுல் அவர்களுக்கு கட்டளையிட்டதைத் தவிர, நீங்கள் இந்த சிறு தண்டனை அவனுக்கு அளிக்கவில்லை, ஆதலால் நானே அவனுக்கு பெரிய தண்டனையை கொடுப்பேன் என்று பவுல் எண்ணியிருப்பாரா? வாய்பில்லை! அவர்கள் பண்ணாமலிருந்ததை (சபையிலிருந்தும் விட்டுநீக்குவது) பண்ணவைப்பார், அவ்வளவுதான்.

அதாவது, சாத்தானுக்கு ஒப்புக்கொடுப்பது என்பதின் விளக்கம் சபையிலிருந்தும் வெளியேற்றுவது. (1கொரி 5:2, 1கொரி 5:5).

அப்படியானால், சபையிலிருந்தும் வெளியேற்றுவதால் கொடும்பாவியின் மாம்சத்த்துக்கு அழிவுண்டாகுமா?


1 கொரிந்தியர் என்கிற நிருபத்தை பவுல் எழுதினது முதல் நூற்றாண்டில் பிழைத்திருந்த கொரிந்த சபையாளர்களுக்கே அல்லாமல், 21ம் நூற்றாண்டில் அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ பிழைத்திருப்பவ்ர்களுக்கு அல்லை. பழைய காலத்தில் முறைகேடான பாலீடுபாடு கொள்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுவந்தது. பெரும்பாலும், அப்படிப்பட்டவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். நாம் பிழைத்திருக்கும் 21ம் நூற்றாண்டில் அப்படிப்பட்ட தண்டனைக்கு வாய்பு குறைவுதான். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த தண்டனை சிறைத்தண்டனைதான்.

கொரிந்த சபையில் இருந்த கொடும்பாவி, சபையலர்களின் பாதுகாப்பிலும், ஆதரவிலும் இருந்தான். அவன் வெளியேற்றப்படும்பொது அவன் அவனுடைய இனத்தார் இடத்துக்கு போவான். அவர்கள் அவனுக்கு தண்டனை அளிப்பார். அப்படி அவனுடைய மாம்சத்த்துக்கு அழிவுண்டாகும்.

இந்த 21ம் நூட்ட்றாண்டில், உங்கள் சபையிலிருந்தும் ஒருவனை வெளியேற்றினால் அவனுக்கு நாட்டுச் சட்டத்தின்படி தண்டனை கிடைக்கும். அவன் சாகும்போது அவனுடைய மாம்சத்த்துக்கு அழிவுண்டாகும்.

அப்படியானால், கொடும்பாவிக்கும் நமக்கும் மாறுபாடு என்ன?


இந்த பதிவுக்கு முன் தேவனுடைய இராஜ்யம் என்கிற தொடர் வெளியீடை வாசித்திருந்தால் நீங்களே தேவனுடைய இராஜ்யம் என்றும், தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்றும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். உங்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை:
  • ரோம 8:1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
உங்களுக்கு சாவில்லை:

  • யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
  • எபே 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
அனால், கொடிய பாவிகளின் நிலைமை அப்படியல்லை, ஆக்கினைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குண்டாகும் ஆக்கினைத்தீர்ப்பு உடம்பின் சாவு (ரோம 5:16, 18; 8:1 போன்ற வசனங்களை ஒப்பிட்டு பார்க்கவும்), ஆனால், அவர்களுடைய ஆவி கர்த்தருடைய நாளில் மீட்கப்படும்.
  • அப்படியானால், நரகம் இல்லையா? இரண்டாம் மரணம் இல்லையா? போன்ற கேள்விகள் எழும்பும். உண்மையான நரகம் என்பதைப்பற்றி, கர்த்தர் வாய்ப்பு கொடுத்தால் அப்புறம் எழுதுவேன்.
  • ஆவிக்கு சாவு இருக்கிறது என்று கூறுகிற வசனங்கள் எதுவும் இல்லை. (தமிழ் வேதாகமத்தில் ஆவி, ஆத்துமா என்று மாறிமாறி மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் அல்லை, எபிரேய மொழியில் rûach -H7307 & H7308 மற்றும் கிரேக்க மொழியில் pneuma -G4151 என்கிற வார்த்தைகள்).

தற்பொழுது உங்கள் சபையில் கொடும்பாவிகள் இருந்தால் என்ன பண்ணவேண்டும்?


பிரச்சினை பண்ணுகிற ஒருவன் உங்கள் மத்தியில் இருந்தால் அவனிடம் நேரடியாக பேசவேண்டும். அவன் சபைக்கு செவிகொடாமல் போனால் அவனை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும். சபையாக கூடிவரும்போது கொடும்பாவியை சபையிலிருந்தும் வெளியேற்றவேண்டும். அவனுக்கு தகுந்த தண்டனையை நாட்டின் சட்டம் வழங்கும். நீங்கள் ஜெபம் பண்ணுவதாலோ, சபையார் அனைவரும் அவனுடைய தலையின்மேல் கைவைத்து கிறிஸ்த்துவின் நாமத்தில் உன்னை சாத்தனுக்கு ஒப்பளிக்கிறோம் என்று கூறுவதாலோ, எதுவும் நடக்காது.

தேவனை தூஷிக்கிறவர்களுக்கும் (1 திமோ 1:19) சபையிலிருந்தும் வெளியேற்றப்படுவதே தகுந்த தண்டனை.

தொடரும்...
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக,

டோம்சான் கட்டக்கல்