புதன், 28 செப்டம்பர், 2016

மத்தேயு 24, உலகத்தின் முடிவு. பகுதி #5: யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

மத்தேயு 24ல் இயேசு உலகத்தின் முடிவைப் பற்றியல்ல, யூதர்களின் யுகத்தினுடைய முடிவைப் பற்றித்தான் கூறினார் என்று நாம் சொல்லும்போது, அப்படியானால், முதல் நூற்றாண்டில் யுத்தம், பஞ்சம், பூமியதிர்ச்சி போன்ற விபத்துகள் ஏற்பட்டதுண்டா என்று எதிர்காலவாதிகள் (Futurists) கேட்பார்கள். இந்த கேள்விக்கு உலக வரலாற்றிலிருந்தும் விடை அளிக்கிறதே இப்பதிவின் நோக்கம்.
மத் 24:6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
மத் 24:7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
“மத்தியக்கிழக்கு (Middle East) நாடுகளில் எங்கேயோ ஒரு ஒட்டகம் குசு விட்டால் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு வெறிபிடிக்கும்” என்றான் என் நண்பர்களில் ஒருவன். ஒரளவுக்கு அவர் சொன்னது உண்மைதான். கீழ் கொடுத்திருக்கும் வரைபடத்தை பாருங்கள்.


தற்போது உலகத்தில் 4 இடங்களில் உக்கிர யுத்தங்கள் நடக்கிறது, 8 இடங்களில் யுத்தங்கள் நடக்கிறது. ஆகிலும் யாரும் அவைகளை கவனிக்க மாட்டார்கள். ஒருவேளை தொலைக்காட்சியிலோ பத்திரிகையிலோ அமேரிக்கா அல்லது இஸ்ரவேல் ஈடுபடுகிற யுத்தத்தை பற்றிய ஒரு செய்தி வந்தால் உடனே கள்ளத்தீர்க்கதரிசிகள் வேதாகமத்தை திறந்துவைத்து தங்கள் கிளிஜோதிடம் தயாரிக்கத் தொடங்குவார்கள்.


ரோமன் அமைதியும் இயேசுவின் எச்சரிப்பும்.


ஏறத்தாழ 12 யுத்தங்கள் நடைபெறுகிற தற்போதிருக்கும் நிலைமையில் யாரோ ஒருவர் யுத்தத்தைப் பற்றி கூறினால் அதில்
அசாதாரணமாக எதுவும் இல்லை. உலக வரலாற்றில் ரோமன் அமைதி (பாக்ஸ் ரொமானா, Pax Romana) என்று அழைக்கப்படுகிற காலத்தில் இயேசு யுத்தத்தைப் பற்றி கூறினார் என்பதே ஆச்சரியம். கி.மு 27க்கும் கி.பி.180க்கும் இடையிலுள்ள காலத்தில் ரோமா பேரரசு, தமக்கு சுற்றிலுமுள்ள சிறு ராஜ்யங்களை கீழ்ப்படுத்தி, அவைகளை தமக்கு திறை செலுத்தும் நாடுகளாக மாற்றினார். இந்த காலத்துக்கு ரோமன் அமைதி என்கிற பெயர் முதன்முறையாக (கி .பி. 55ல்) பயன்படுத்தினவர் லூசியஸ் செனேகா (Lucius Seneca) என்பவர். முற்றிலும் அமைதி நிலைபெற்ற இந்த காலத்தில் தான் இயேசு யுத்தங்களைப் பற்றி முன்னறிவித்தார் என்பதை கவனிக்கவேண்டும்.

இயேசு யாரிடம் பேசினார்?


மத்தேயு 24ன் இணையான மாற்கு 13ம் அதிகாரத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது:
மாற் 13:3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: (asked him privately - KJV)
தனித்துவந்து என்பதின் விளக்கம் என்னவென்றால்: இது இயேசுவுக்கும் சீடர்களுக்கும் இடையில் உண்டான
ஒரு தனிப்பட்ட உரையாடல் (private conversation). இந்த
உரையாடலில் கேள்விப்படுவீர்கள் (you will hear) என்று சொல்லப்பட்டதின் விளக்கம் கி.பி 2016ல் பெங்களூரில் தங்கியிருக்கும் டோம்ஸான் கட்டக்கலோ, சென்னையில் தங்கியிருக்கும் இக்நேஷியஸ் இளங்கோவோ, திருச்சியில் தங்கியிருக்கும் ஜெயசீலனோ கேள்விப்படுவார்கள் என்பதல்ல, யார் இயேசுவிடம் கேள்வி கேட்டார்களோ அவர் கேள்விப்படுவார்கள் என்பதே. வேதாகமத்தை வாசிப்போர்கள் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படும்போது உலகத்தின் முடிவு நடக்கவேண்டுமென்றால் கடந்த 2000± வருடங்ளாக எத்தனையோ கோடி கிறித்தவர்கள் யுத்தத்தின் செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? அப்பொழுதெல்லாம் உலக முடிவு நடக்கவில்லையே?

அப்போஸ்தலருடைய காலத்தில் நடந்த யுத்தங்கள்.


இந்த பதிவுக்காக ஆராய்ச்சி பண்ணும்போது பைபிள்-ஹப் (Bible Hub) என்னும் இணையதளத்தில் மத் 24:6-7 வசனங்களின் வியாக்கியானங்களை கவனித்தேன். வியாக்கியானங்கள் எழுதின எதிர்காலவாதிகளில் பெரும்பாலும் பேர்கள் இயேசு கூறின
யுத்தங்களும், பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் முதல் நூற்றாண்டிலே நடந்தேறிற்று என்பதாக வலியுறுத்துகிறதை கவனித்தேன்.

நான் ஒரு வரலாற்று மாணவன் அல்ல, தமிழனுமல்ல; ஆதலால், வரலாற்றில் உள்ள அனைத்து விபரங்களையும் பகிர என்னால் இயலாது.

  1. ஏரோது ராஜாவுக்கும் அவருடைய மாமனாராகிய அரேத்தா ராஜாவுக்கும் (2கொரி 11:32) இடையில் ஏற்பட்ட யுத்தம். ஏரோது ராஜா அரேத்தா ராஜாவின் மகளாகிய தன் மனைவி ஃபசேலிசை அசட்டை செய்து, தன் தம்பியான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்துக்கொண்டிருந்தால் (மத் 14:3) ஃபசேலிச் தன் தகப்பனிடம் ஓடிப்போனாள். கோபம் மூண்ட அரேத்தா தன் படைகளுடன் வந்து ஏரோதுக்கு விரோதமாக யுத்தம்செய்தான். (கி.பி.33-34ல்.)
  2. காலிகுலா (Caligula) என்னும் ரோமா அரசன் தனது சிலையை எருசலேம் தேவாலயத்தில் வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டான். யூதர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கோபம் மூண்ட காலிகுலா யூதர்களுக்கு விரோதமாக தன் படைகளை அனுப்புவான் என்கிற செய்தி பரம்பிற்று. விவசாயிகளான யூதர்கள் விவசாயம் பண்ணாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். செய்தி எழும்பினதே அல்லாமல், யுத்தம் உண்டாகவில்லை. (கி.பி.37-41ல்.) (“யுத்தங்களின் செய்திகள்”)
  3. வென்டிடியஸ் குமானஸ் (Ventidius Cumanus) பண்ணின படுகொலை. குமானஸ் என்ற ரோமன் ஆளனாரின் காலத்தில் பஸ்கா பண்டிகையில் கலந்துகொள்ள தேவாலயத்துக்கு வந்த யூதர்கள் மேல் கெட்ட வார்த்தைகள் சொரிந்த ஒரு போர்ச்சேவகர் மேல்நடவடிக்கை எடுக்க குமானஸ் தயங்கினதால் கோபம் மூண்ட யூதர்கள் ரோமன் காவலர்கள் மேல் கல்லெறிந்தார்கள். அதற்கு குமானஸ் பழிவாங்கினபோது, 20,000-30,000 யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.
  4. கி.பி.63க்கு முன் செசரியாவில் சீரியர்களும் யூதர்களும் அந்த ஊரின் உடைமையுரிமையை பற்றி வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்பட்டது. காலிகுலா, கிலவுதியு, நீரோ என்னும் அரசர்களின் காலங்களில் ஏற்பட்ட மோதல்களில் ஏறத்தாழ 20,000 யூதர்கள் கொலையுண்டார்கள். யூதர்கள் அந்த நாட்டிலிருந்தும் துரத்தப்பட்டார்கள். கோபம் மூண்ட யூதர்கள் சுற்றுபுறத்திலுள்ள சீரியர்களின் ஊர்களை கொள்ளையடித்து, அவர்களை படுகொலை பண்ணினார்கள். செசரியாவிலிருந்தும் ஜனங்கள் (தீரியரும், சீதோனியரும்) முறையிட ஏரோதிடம் வந்ததையும், அவர் ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினதையும் பற்றி அப்பொ 12:20-21ல் வாசிக்கிறோம்.
  5. சித்தோபாலிஸின் (Scythopolis) ஜனங்கள் தங்களுடைய இனத்தார்களாகிய ஒரு குழுவிடம் போராட யூதர்களை பயன்படுத்தினார்கள். அந்த கழுவை ஒடுக்கின பிறகு, சித்தோபாலிஸின் ஜனங்கள் இரவில் பதிவிருந்து யூதர்கள படுகொலை பண்ணினார்கள். அன்று கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 11,000 பேர். (“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும்”!)
  6. அஷ்கெலோனின் (Ashkelon) கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 2,500 பேர்.
  7. தாலமாயில் (Ptolemais) கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 2,000 பேர்.
  8. அலெக்சாண்டிரியாவில் யூதர்களுக்கும் அந்நியஜாதிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஏறப்ட்டது. இரண்டு பக்கத்திலும் ஏராளமான பேர்கள் மாண்டார்கள். கொலையுண்ட யூதர்கள் ஏறத்தாழ 50,000.
  9. பிலதெல்பியா, பாபேல், சீரியா ... யூதர்கள் கொலையுண்ட நாடுகளின் பட்டியலுக்கு முடிவில்லை. , ஃப்லேவியஸ் யோசஃபஸ் (Flavius Josephus) என்கிற யூத வரலாற்றாசிரியர் எழுதின “யூதர்களின் பழங்காலம்” (The Antiquities of the Jews) என்கிற புத்தகத்திலும், டெசிடஸ், ப்லினி, ஃபிலோ போன்ற வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களிலும் இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.

பஞ்சங்கள்.

மத் 24:7 ...பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
இந்த வசனம் நிறைவேறினது என்பதற்கு வேதாகமத்திலே அத்தாட்சி கிடைக்கும்.
அப் 11:27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
அப் 11:28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
தொடர்ந்துவரும் வசனங்களில் பஞ்சத்தால் வருத்தப்படுகிறவர்களுக்கு உதவி பண்ணும் படிக்கு சேகரிப்பு நடத்துகிறதை பற்றி வாசிக்கிறோம்.

யூதேயாவில் பஞ்சத்தால் வருத்தப்படுகிற கிறிஸ்துவை பின்பற்றின யூதர்களுக்காக மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்து உணவுபொருட்களை சேர்த்ததை பற்றிய விவரணைகள் பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கில் பணம் சேர்க்கிற, பங்களா கட்டுகிற, பி.எம்.டபிள்யூ கார் வாங்குகிற பாஸ்டர்களுக்கு, அவ்வசனங்கள் இயேசு உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் என்று எப்படி உணர்ந்துகொள்ளமுடியும்?

வாசியுங்கள்: ரோம 15:25-31; 1கொரி 16:1-16; 2கொரி 9:1-12.

பூமியதிர்ச்சிகள்.

வேதாகமத்துடன் தொடர்புள்ள மிகவும் முக்கியமான பூமியதிர்ச்சி ஏற்பட்டது லவோதிக்கேயாவில் (வெளி 1:11). கி.பி.60ல் உண்டான பூமியதிர்ச்சியில் அந்த பட்டணம் முழுமையாக நாசமடைந்தது.

யூதேயா, கிரேத்தா, ரோம, அப்மீயா, பிரிகியா, கம்பானியா போன்ற இடங்களில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதென்று மேற்சொன்ற வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.

முதல்நூற்றாண்டில் ஏற்பட்ட ஒருசில யுத்தங்களையும், பஞ்சங்களையும், பூமியதிர்ச்சிகளையும் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். இன்னும் விரிவாக எழுதினால் வாசிப்போர்களுக்கு வாசிப்போர்க்கு சலிப்பாக அமையும் என்று என்று எண்ணுகிறேன்.
கிறிஸ்துவுக்குள்
டோம்ஸான் கட்டக்கல்

வியாழன், 22 செப்டம்பர், 2016

மத்தேயு 24, உலகத்தின் முடிவு. பகுதி #4: கி.பி.70க்கு முன் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

கடந்த 2, 3 நூற்றாண்டுகளாய் உலகத்தின் பல மூலைகளிலும் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பினார்கள் என்பது உண்மைதான். போன சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் 5 முதல் 10 வரை கள்ளத்தீர்க்கதரிசனங்கள் முற்றும் தவறானதைப் பார்த்தோம்.

தங்களை தாங்களே கிறிஸ்து என்று உரிமைகோருகிற ஏறத்தாழ 12 பேர்கள் இப்பொழுதும் கூட இருக்கிறார்கள். இப்படியிருக்க, இதுதான் கடைசிக்காலம் என்று யாராகிலும் நினைத்தால் அவர்களை குற்றப்படுத்த முடியாது.

மத்தேயு 24ல் பலமுறை (மத் 24:24:5, 11, 23-24) கள்ளக் கிறிஸ்துக்களையும் கள்ளத்தீர்க்கதரிசிகளையும் பற்றி கூறப்படுள்ளது. பொதுவாக, உலகமுடிவு என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும், நாம் யூதர்களுடைய யுகத்தின் முடிவு என்று வலியுறுத்துகிறதுமாகிய கி. பி. 70க்கு முன் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா என்கிற கேள்வி மிகவும் தொடர்புடையது.

இயேசுவும் சீடர்களும் வாழ்ந்த தலைமுறையில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருந்தார்களா என்பதைப் பற்றி வேதாகமத்தினுடையும் வரலாற்றினுடையும் அடிப்படையில் நடத்துகிற ஒரு ஆராய்ச்சி தான் இந்த பதிவு.

வேதத்தை படிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்: வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியதன் விவரங்கள் வேதாகமத்திலே இருக்கும், அவை நிறைவேறுதல்கள் என்று நமக்கு தெரியாமலிருந்தாலும், நமது சபைகள் (திட்டமிட்டு) நமக்கு கற்றுக்கொடுக்காமல் இருந்தாலும்.

இயேசுவும், புதிய ஏற்பாடின் எழுத்தாளர்களும் எந்த காலத்தைப் பற்றி கடைசிக் காலம் என்று குறிப்பிட்டார்களோ அந்த காலத்தில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருப்பார்கள் என்று சொன்னதைத் தவிர, நீங்கள் அப்படிப்பட்டவர்களை பார்க்கும்போதெல்லாம் கடைசிக் காலமாக அமையும் என்று சொல்லவில்லை. கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பும்போதெல்லாம் கடைசிக் காலம் நடைபெறுமென்றால், இயேசுவின் காலத்துக்கு முன்னும் அப்படிப்பட்டவர்கள் இருந்தார்களே? ஒரு விவசாயி “மழை விழும்போது விதைபோட வேணடும்” என்று சொன்னால், மழை விழும்போதெல்லாம் விதைபோட வேணடும் என்கிற விளக்கம் இருக்குமா?

கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும்.


[எபிரெய மொழியிலுள்ள “மேசியா” என்கிற வார்த்தைக்கு துல்லியமான கிரேக்க வார்த்தைதான் “கிறிஸ்து”. இவ்விரண்டு வார்த்தகளுக்கும் விளக்கம் “அபிஷேகம் பெற்றவர்” என்பதே.]

இயேசுவைப் போல, தம்மைதான் மேசியா என்று உரிமை கோரினவர்களைப் பற்றி யூதர்களின் ஆலோசனைச் சங்கத்தில் கமாலியேல் என்கிற பரிசேயன்:
அப் 5:36 ... இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். 
நமது நாட்டில் பொன்னுச்சாமி, முருகன், கமலா போன்ற பெயர்களைப் போல, இஸ்ரவேல் நாட்டில் தெயுதாஸ் என்பது வழக்கமான ஒரு பெயர் என்று தோன்றுகிறது, ஏனென்றால், ஃப்லேவியஸ் யோசஃபஸ் (Flavius Josephus) என்கிற யூத வரலாற்றாசிரியர் எழுதின “யூதர்களின் பழங்காலம்” (The Antiquities of the Jews) என்கிற புத்தகத்தில் இன்னொரு தெயுதாஸைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த தெயுதாஸ் ஈடுபட்ட நிகழ்வு கிறிஸ்துவின் மரணத்துக்கு 10-12 ஆண்டுகள்க்கு பிறகு நடந்தது. அந்த தெயுதாஸ் ஏறத்தாழ 30,000 பேரை ஏமாற்றி, யோர்தான் ஆற்றைப் பிரித்து, மறுகரைச் செல்ல வழி உண்டாக்குவார் என்று நம்பவைத்தார். கஸ்பியஸ் ஃபாடுஸ் (Cuspius Fadus) என்ற ரோமன் ஆளுனர் தன் படையை அனுப்பி அவர்களுடைய முயற்சியை தடுத்தார், தெயுதாஸைக் கொலைசெய்தார்.
அப் 5:37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். 
மேசியா வரும்போது அவர் தங்களை ரோமர்களுடைய ஆட்சியில் நின்றும் விடுவிப்பார் என்பதாக தவறான எண்ணம் கொண்டு இருந்த யூதர்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி தன்னைத்தானே மேசியா என்று உரிமை கோரினவர்களாகிய இவர்கள் சுரண்டினார்கள்.

இயேசு பரலோகத்துக்கு எடுக்கப்பட்டு, ஒராண்டுக்குப்  பிறகு, தோஸித்தியோஸ் என்னும் சமாரியன் எழும்பி, உபா 18:15ல் கூறப்பட்டிருக்கிற தீர்க்கதரிசி (மேசியா) அவரே என்று உரிமை பாராட்டினான். அவருடைய சீடனாகிய சீமோன் மாக்னஸ் (அப் 8:9ல் மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன்) தான் “தேவனுடைய வல்லமை” என்று உரிமை பாராட்டினான்.
அப் 8:9 சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.
அப் 8:10 தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். (பிற்பாடு இவன் இயேசுவை ஏற்றுக்கொண்டான்.) 
இன்னும் 2, 3 வருடங்களுக்குப் பிறகு மற்றொரு சீமோன் எழும்பி, மோசேயின் காலத்தில் உண்டாக்கின தேவாலயத்துப் பாத்திரங்களை காண்பிப்பேன் என்று கூறி, ஏராளமான பேரை ஏமாற்றினார். ஜனங்களோ மேசியா வந்திருக்கிறார் என்று எண்ணி அவரை பின்பற்றி நாசமடையும் முன் பிலாத்து தலையிட்டு ஒரு பெரிய விபத்தைத் தவிர்த்தார்.

பேலிக்ஸ் தேசாதிபதியாக இருந்த நாட்களில் யூதேயா நாட்டில் ஏராளமான கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள், நாள்தோறும் அவர்களை பிடித்து, கொலை பண்ணினார்கள். இந்த படுகொலையின் பலனாக பேலிக்ஸுக்கு அவர் பதவி பறிபோனது.

இதே காலத்தில் பேலிக்ஸ் என்னும் பெயரில் இன்னொரு எகிப்தியன் எழும்பி, ஒலிவமலைக்கு வாருங்கள், அங்கேயிருந்தும் நான் எருசலேமின் மேல் என் கையை தூக்குவேன், அப்பொழுது அப் பட்டணத்தின் சுவர்கள் எல்லாம் உடைந்து விழும், நாம் உட்புகுந்து, ரோமர்களின் பாளயத்தை பிடிப்போம் என்று சொல்லி, ஏறத்தாழ 30,000 பேரை ஏமாற்றினான்.

பொர்க்கியு பெஸ்து (அப் 24) தேசாதிபதியாக இருந்த நாட்களில் ஒரு ஏமாற்றுக்காரன் எழும்பி, யூதர்களை ரோம நுகத்தின் கீழிருந்தும் விடுவிப்பேன் என்று வாக்குறுதி அளித்து, அவர்களை வனாந்தருக்கு கூட்டிச்செல்ல முயன்றான். ஆனால், பெஸ்துவின் எச்சரிக்கையினால் ஒரு விபத்து தடைப்பட்டது.

தோஸித்தியோஸ் ஒருவரே தவிர வேறு யாரும் தம்மைத்தாமே கிறிஸ்து அல்லது மேசியா என்று நேரடியாக உரிமை பாராட்டவில்லை என்பதை கவனிக்கவும். மேசியா வரும் எருசலேமில் தனது ராஜ்யத்தை நிலைநாட்டுவார் என்று தவறான எண்ணம் கொண்ட யூதர்கள் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களை நம்பி பின்பற்றினார்கள்.

அப் 13:6ல் பர்யேசு என்னும் தீர்க்கதரிசியயைப் பற்றி வாசிக்கிறோம்.
அப் 13:6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். 
இந்த பர்யேசு செர்கியுபவுல் என்கிற அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடினார் என்பதையும் தொடர்ந்துவரும் வசனங்களில் வாசிக்கிறோம்.

யோவான் தம்முடைய முதல் நிருபம் எழுதின நாட்களில் கள்ளத்தீர்க்கதரிசிகள் இருந்தார்கள் என்று சான்றளிக்கிறார்:
1யோவா 4:1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் (இறந்த காலம்), நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
கள்ளக்கிறிஸ்துக்கள் என்கிற வார்த்தையினால் இயேசு அந்திக்கிறிஸ்துக்களை (எதிர்க்கிறிஸ்து என்பதே பொருத்தமுடைய மொழிபெயர்ப்பு) குறிப்பிட்டாரா என்பது தெரியாது. எப்படியாகிலும், யோவான் தம்முடைய நிருபங்களை எழுதின காலத்தில் ஏராளமான அந்திக்கிறிஸ்துக்கள் இருந்தார்கள் என்று சான்றளிக்கிறார்:
1யோவா 2:18 பிள்ளைகளே, இது (யோவான் இதை எழுதின காலம்) கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் (யோவான் இதை எழுதின காலத்தில்) அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
1யோவா 4:3 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் (யோவான் இதை எழுதின காலத்தில்) உலகத்தில் இருக்கிறது.
2யோவா 1:7 மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் (யோவான் இதை எழுதின காலத்திலே) உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
நான் வரலாற்று மாணவரும் அல்ல ஆராய்ச்சியாளரும் அல்ல. வேதாகமத்திலும், பொது தளத்தில் கிடைக்கும் ஃப்லேவியஸ் யோசஃபஸ் எழுதின புத்தகங்களிலுமிருந்து கிடைக்கும் அறிவு தான் எனக்கு இருக்கிறது. இன்னும் பரவலாக வரலாற்றில் ஆராய்ச்சி செய்தவர்கள் இன்னும் விரிவான விவரங்கள் அளிக்கக்கூடும்.

தமிழில் இதைப்போன்ற பதிவுகள் இல்லையென்பதால் மலையாளியான நான் எழுத முயன்றேன், இலக்கண, வழக்க தவறுகள் இருக்கலாம். தயவுசெய்து மன்னிக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

மத்தேயு 24, உலகத்தின் முடிவு. பகுதி #3. “இவைகள்”

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

மத் 24:3ல் சீடர்கள் “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்” என்று யேசுவிடம் கேட்டதில் “இவைகள்” என்னதை குறிக்கிறது? மத்தேயு 21ம் அதிகாரத்தின் இரண்டாவது பாதியில் தொடங்கி, 22, 23 அதிகாரங்கள் முழுதும் இயேசுவுக்கும் வேதபாரகர், பரிசேயர், சதுசேயர் என்பவர்களுக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் விவரணையை வாசிக்கிறோம்.

மத் 21ன் முடிவில் இயேசு ஆசாரியர், பரிசேயர் என்பவர்களிடம் கூறின முக்கியமான கருத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது:
மத் 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். (அவரிடமிருந்து ராஜ்யத்தை நீக்கி, யார்க்கு கொடுக்கப்பட்டது? உங்களுக்கும் எனக்கும். யூதர்களிடம் இன்னும் ராஜ்யம் இருக்கிறதா, அல்லது, அவர்களிடமிருந்து நீக்கப்படவில்லையா, அல்லது அவர்களிடமிருந்து நீக்கப்பட்ட ராஜ்யத்துக்கு என்னாயிற்று?)
மத் 22ல் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவைப் பற்றிய உவமையில், கலியாணத்துக்கு வர மறுத்தவர்களின் பட்டணத்துக்கு அந்த ராஜா என்ன பண்ணினார் என்பதை கவனியுங்கள்.
மத் 22:7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். (இந்த வசனம் கி.பி.70ல் நடந்த எருசலேமின் அழிவைப் பற்றி கூறுகிறது என்று ஏறத்தாழ எல்லா வேத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.)
மத்தேயு 23ன் முடிவு மேற்ச்சொன்ன வாக்குவாதத்தின் உச்சகட்டமாக இருக்கிறது. அங்கே இயேசு அவர்களிடம்:  ஆபேலின் இரத்தம் முதல் பூமியின் மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள் மேல் வரும் என்று அடித்துச்சொன்ன பிறகு சொன்ன வார்த்தைகளை கவனியும்:
மத் 23:36 இவைகளெல்லாம் (நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம்) இந்தச் சந்ததியின் (சந்ததி என்று மொழிபெயர்த்திருக்கும் கிரேக்க வார்த்தையின் உண்மையான மொழிபெயர்ப்பு: தலைமுறை) மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத் 23:37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
மத் 23:38 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். (வீடு = தேவாலயம். மத் 12:4, மாற் 2:26; லூக் 6:4)
இவ்வளவு நீடித்த ஒரு வாக்குவாதத்தை முடித்தபிறகுதான் அவர் தேவாலயத்தை விட்டு புறப்பெட்டு, ஒலிவமலையின் மேல் போய் அமர்ந்துக்கொண்டான். போகும் வழியில்:
மத் 24:1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
மத் 24:2  இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இதைப் பற்றித்தான் சீடர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடிக்கப்பட்டது கி.பி.70ல், ரோமன் படை அதை இடித்தது. பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ள யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் தேவாலயம் இடிக்கப்படும் முன் நிகழவேண்டியதாக இருந்தது. (இவைகளெல்லாம் நிகழ்ந்ததா, இல்லையா என்பதை ஒவ்வொரு வசனத்தைப் பற்றி படிக்கும்போது பார்க்கலாம்.)

இயேசுவின் வருகைக்கான அடையாளங்களையும், தேவாலயம் இடிக்கப்பட்டுப்போகும் முன் நிகழவேண்டிய அடையாளங்களையும் அவர் தனித்தனியாக பிரித்து கூறவில்லை, மாறாக, இரண்டையும் ஒருமித்து கூறப்பட்டுள்ளது இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருமித்து, ஒரே காலத்தில் நடக்கவேண்டியது என்பதற்கு அத்தாட்சியாக அமைகிறது.

[தயவுசெய்து, மைக்ரோசாப்ட் எக்செலில் (Microsoft Excel) அல்லது அகலமுள்ள ஓர் காகிதத்தில் (ruled paper) மத்தேயு 24, மாற்கு 13, லூக்கா 21 என்கிற அதிகாரங்களிலிருக்கும் ஒரே கருத்து தரும் வசனங்களை இணையாக (parallel) எழுதி, ஆய்ந்து படியுங்கள்.]

தேவாலயம் இடித்தது ரோமன் படை என்பது உலக வரலாற்றில் இருக்கும் மறுக்க முடியாத உண்மை. இந்த உண்மை மத்தேயு 24ல் இருக்குமா? இருக்கிறது.

மத் 24:15ல் குறிப்பிட்டுள்ள பாழாக்குகிற அருவருப்பைப் பற்றி என்னென்ன கதைகளை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அது ரோமன் கத்தோலிக்க சபை, அவர்கள் இராபோஜனத்துக்கு பயன்படுத்தும் அப்பம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கலாம்.
மத் 24:15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது,
மத் 24:16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
இந்த வசனத்துக்கு இணையான (parallel) வசனத்தை லூக்காவின் சுவிசேஷத்தில் பார்க்கும்போது இப்படி எழுதப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம்:
லூக் 21:20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
லூக் 21:21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
இந்த வசனங்களுக்கு இணைவில்லை என்கிறீர்களா? இந்த வசனங்களுக்கும் பின்வரும் வசனங்களை கவனித்தீர்களா? “அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போ..”.

இந்த ஒரு வசனம் அவர்களுடைய கோட்பாடுகளுக்கு ஒத்துவராததால் ஒருசில கிறித்தவ மேதாவிகள் லூக்காவின் சுவிசேஷம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டதல்லை என்பார்கள். இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் அப்படிப்பட்ட மேதாவி அல்லை என்று எண்ணுகிறேன்.

யுத்தங்கள், யுத்தங்களின் செய்திகள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் போன்றவைகள் இயேசுவின் வருகைக்கு முன் நிகழவேண்டும் என்று கூறுகிறார்களே, “இவைகள் (தேவாலயம் கல்லின் மேல் கல்லிராதபடிக்கு இடிக்கப்படுகிறது) சம்பவிக்கும்” முன்னும் அவைகளெல்லாம் நடக்கவேண்டியிருந்தது. இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவாலயம் இடிக்கப்பட்ட காலமும், இயேசுவின் வருகையின் காலமும் வேறுவேறு காலங்கள் அல்லை!

கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்

மத்தேயு 24, உலகத்தின் முடிவு, பகுதி #2. “உலகம்”

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,



மத் 24:3ல் உள்ள ஒரு சொற்றொடரை இந்தப் பதிவில் பார்ப்போம்: ...
உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?”
இயேசுவும் சீடர்களும் திருச்சியிலோ, மதுரையிலோ இருக்கவில்லை என்பதாலும், வேதம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்பதாலும் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க (Greek) வார்த்தைகள் எவைகள் என்று கண்டுபிடிக்க வரிகளுக்கிடையே கிரேக்க வார்த்தைகளின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஆங்கில வேதாகமத்தை (interlinear Bible) பயன்படுத்துகிறேன்:
... the sign of thy coming, and of the end[G4930] of the[G3588] world[G165]? (Mat 24:3, KJV)
இங்கே [G165], [G4930] போன்ற எண்கள் அந்தந்த இடங்களில் பயன்படுத்தியிருக்கும் கிரேக்க வார்த்தைகளின் ஸ்ட்ராங்ஸ் எண். (ஜேம்ஸ் ஸ்ட்ராங் - James Strong - என்கிற வேத அறிஞர் தயாரித்த ஸ்ட்ராங்ஸ் அகராதியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எண்.)

மத் 24:3ல் “உலகத்தின் முடிவு” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகள் அதே வரிசையில் பயன்படுத்தப்பட்டுள்ள இன்னொரு வசனத்தை பார்ப்போம்:
Heb 9:26 ... but now once in the end[G4930] of the[G3588] world[G165] hath he (Jesus) appeared to put away sin by the sacrifice of himself.
இந்த வசனம் தமிழில் மொழிபெயர்த்தோர் “உலகத்தின் முடிவு” என்பதாக மொழிபெயர்க்காமல் “கடைசிக்காலம்” என்பதாக மொழிபெயர்த்ததை கவனியுங்கள்:
எபி 9:26 ... அவர் (இயேசு) தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.
  1. பாவங்களை நீக்கும் பொருட்டாக தம்மைத்தாமே பலியிடுகிறதற்கு இயேசு வெளிப்பட்டது 2016லா அல்லது 21ம் நூற்றாண்டிலா?
  2. அப்படி இயேசு வெளிப்பட்ட காலம் “கடைசிக்காலம்” அல்லது “உலகத்தின் முடிவு” என்று அழைக்கப்பட்டிருக்கும்போது, எத்தனை “கடைசிக்காலங்களும்” “உலகத்தின் முடிவுகளும்” இருக்கும்?
  3. தம்மைத்தாமே பலியிட இயேசு வெளிப்பட்டு 30-33 வருடங்களுக்கு பிறகுதானே அந்த பலி நடந்தது? அந்த பலி நடந்ததற்கு ஒரு வாரம் முன் சீடர்கள் யேசுவிடம் பேசினபோது (மத் 24:3) அவர்கள் அவர்களுக்கு நெருங்கியிருக்கும் உலக முடிவைப் பற்றி கேட்டார்களா, அல்லது, 2000 வருடங்களுக்கு அப்புறம் நடக்கவேண்டிய உலக முடிவைப் பற்றி கேட்டார்களா?
  4. இயேசுவின் பலிக்கு ஒருசில வருடங்களுக்கு பிறகு எபிரேயருக்கான நிருபம் எழுதப்பட்டபோது “கடைசிக்காலம்” இன்னமும் நீடித்திருக்கிறது (“இந்தக் கடைசிக்காலத்தில்”) என்பதை கவனியுங்கள். இந்த நிருபம் எழுதப்பட்ட காலமும் கடைசிக்காலம், நாம் உயிரோடிருக்கும் இருபத்தொன்றாம் நூற்றாண்டும் கடைசிக்காலம் என்றுச் சொன்னால் கடைசிக்காலம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, வேதத்தின் காலமுறை வரிசையின் படி, ஆதாம் முதல் இப்பொழுது வரைக்கும் ஏறத்தாழ 6000 வருடங்களாயிற்று, இந்த 6000 வருடங்களில், 2000+ வருடங்கள் கடைசிக்காலமாக இருக்க வாய்ப்பில்லை. யேசுவும் சீடர்களும் பேசிக்கொண்டிருந்தது அவர்கள் அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் முடிவைப் பற்றியே அல்லாமல், உலகத்தின் முடிவைப் பற்றி அல்லை! இதை எப்படி உணர்ந்துகொள்ள முடியும்? அவர்கள் வாழ்ந்திருந்த காலம் தேவதூதர்களுக்கு கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது. மீறுதலுக்கு கடினமான தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. (எபி 2). உதாரணமாக, ஏழைகளான குடிமக்களிடம் அமைதியாகப் பேசாமல், அகங்காரத்துடன் அவர்களிடம் பேசின ஏரோது ராஜாவை கர்த்தருடைய தூதன் அடித்ததைப் பற்றி அப் 12ல் வாசிக்கிறோம்.
அப் 12:23 அவன் (ஏரோது ராஜா) தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். (அப் 12:20லிருந்தும் வாசியுங்கள்).
(ஒருவேளை, அனனியாவையும் அவன் அவனுடைய மனைவியாகிய சப்பீராளையும் தண்டித்ததும் தேவனுடைய தூதனாயிருக்கலாம், ஏனென்றால், தேவனுடைய ஆவி உயிரைக் கொடுக்கிறது, உயிரை எடுக்கிறதில்லை.)

நாம் இப்பொழுது அந்த உலகத்தில் அல்லை. நாம் அந்த உலகத்தில் இருந்தோமாகில், நம் மத்தியில் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் பண்ணுகிற அனைவரையும் தேவனுடைய தூதன் அடிக்கவேண்டும். ஏழைகளான விசுவாசிகளின் பணத்தைப் பிடுங்கி, மாளிக கட்டி, பி.எம்.டபிள்யூ (BMW) காரில் சுற்றித்திரிந்து, மீண்டும், ஞாயிற்றுக்கிழமை அந்த ஏழைகளை அவமதிக்குகிற ஏராளமான பாஸ்டர்களை தேவதூதன் அடிக்கவேண்டும்.

இல்லை, நாம், அந்த உலகத்தில் இல்லை, நாம் உயிரோடிருக்கும் உலகத்துக்கு முடிவில்லை (தமிழ் வேதாகமத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படாததால், ஆங்கில வசனத்தை கவனியுங்கள்.)
Eph 3:21 Unto him (God) be glory in the church by Christ Jesus throughout all ages, world without end[G165] [G165]. Amen.
எபே 3:21 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் (முடிவில்லாத உலகத்திலும்) மகிமை உண்டாவதாக. ஆமென்.

கவனியுங்கள்: மத் 24:3; எபி 9:26; எபே 3:21 போன்ற வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள [G165] என்கிற கிரேக்க வார்த்தையானது: ஏயியோன் (αἰών). இந்த வார்த்தைக்கு “உலகத்தில் மக்கள் தங்கியிருக்கும் வறண்ட நிலம்” என்கிற என்கிற விளக்கம் இல்ல. இந்த வார்த்தையின் அர்த்தம்: “ஊழி” அல்லது “காலப்பிரிவு” (era, epoch) என்பதே. இந்த விளக்கத்துக்கு அத்தாட்சி என்னவென்றால்: “என்றென்றைக்கும்” அல்லது “சதாகாலங்களிலும்” என்கிற விளக்கங்கள் கிடைக்க இந்த வார்த்தை தொடர்ச்சியாக இரண்டு தடவை பயன்படுத்தியிருக்கிறதை பார்க்கலாம்:
Rom 16:27 To God only wise, be glory through Jesus Christ for ever[G165][G165]. Amen.
ரோம 16:27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Rev 4:9 And when those beasts give glory and honour and thanks to him that sat on the throne, who liveth for ever and ever[G165][G165],
வெளி 4:9 மேலும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,...
தேவனுடைய புஸ்தகத்தை ஆராய்ந்து வாசியுங்கள், படியுங்கள், உலகத்துக்கு முடிவில்லை! வேதம் கூறுகிறது யூதர்களின் யுகத்தின் முடிவைப் பற்றியே.


கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டக்கல்