செவ்வாய், 27 ஜனவரி, 2015

தேவனுடைய இராஜ்யம், பரலோக இராஜ்யம், நித்திய ஜீவன்

நண்பர்களே,

[Tamil is not my native tongue, if you find any spelling or grammar mistake, please let me know.]

ஒருசில கிறித்தவ வகுப்பினர்கள் தேவனுடைய இராஜ்யம் வேறு பரலோக இராஜ்யம் வேறு என்று போதிக்கிறார்கள். இப்படிப்பட்ட மாறுபாடு வேதம் போதிக்கிறதுண்டா? இப்படிப்பட்ட போதனைக்கு வேதத்தில் ஆதாரம் உண்டா என்பதை பார்ப்போம்.

'பரலோக இராஜ்யம்' (Kingdom of heaven) என்கிற சொற்றொடர் மத்தேயுவின் சுவிசேஷத்தில் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில வேதநிபுணர்கள் மத்தேயுவின் சுவிசேஷம் யூதர்களுக்காக எழுதப்பட்டது என்றும், யூதர்கள் தேவனுடைய பெயர் உச்சரிக்கமாட்டார்கள் என்பதினால் தேவன் உட்கார்ந்திருக்கும் இடமாகிய 'பரலோகம்' என்று எழுதப்பட்டுள்ளது என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த வாதம் பொய் மற்றும் தவறு. யூதர்களுக்கு தேவன் என்கிற வாக்கோடு இவ்வளவு ஒவ்வாமை (அலர்ஜி) இருந்தால் ஏன் தேவன் என்கிற வார்த்தை 53 தடவை மத்தேயுவின் சுவிசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? அதுவும் அல்லாமல் 'தேவனுடைய இராஜ்யம்' என்று 5 தடவை (மத் 6:33; 12:28; 19:24; 21:31; 21:43) மத்தேயுவின் சுவிசேஷத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

தேவனுடைய இராஜ்யமும் பரலோக இராஜ்யமும் ஒன்றுதான் என்று உணர்ந்துகொள்ள மிகவும் எளிதான முறை என்னவென்றால்: மத்தேயு, லூக்கா என்பவர்களுடைய சுவிசேஷங்களில் உள்ள இராஜ்யத்தைப் பற்றிய உவமைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது.

உவமைமத்தேயுலூக்கா
கடுகு விதையின் உவமைமத் 13:31 ...பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.லூக் 18-9 ...தேவனுடைய ராஜ்யம் ...
19) அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது;
புளித்தமாவின் உவமைமத் 13:33 ... பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது;லூக் 13:20 ... தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21) அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது...

தேவனுடைய இராஜ்யமும் பரலோக இராஜ்யமும் ஒன்றுதான் என்பதற்கு அத்தாட்சியளிக்கும் ஒரு பத்தியை மத்தேயுவின் சுவிஷேத்திலிருந்தும் வாசிப்போம். ஐசுவரியவானாகிய வாலிபன் ஒருவன் இயேசுவிடம் கேட்ட கேள்வியும் அதற்க்கு இயேசு அளித்த விடையும் நம்மெல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆதலால் நமக்கு தேவையான வசனங்களை மற்றும் பார்ப்போம்.

கேள்வி நித்திய ஜீவனைப்பற்றி:
மத் 19:16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்.
அந்த வாலிபன் போன பிறகு இயேசு சீடர்களிடம் சொன்ன விளக்கம்:
மத் 19:23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத் 19:24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
கவனமாக வாசியுங்கள், மேலே எடுத்துரைக்கப்பட்டுள்ள இரண்டு வசனங்களும் ஐசுவரியவானைப் பற்றியே. 'முதலாவது ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது' என்று சொன்ன பிறகு இயேசு அதற்க்கான ஒரு உவமானத்தைக் கூறினார்: அந்த உவமானம் தான் ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவதைப்பற்றிய உவமானம். விளக்கத்தில் 'பரலோகராஜ்யம்' என்று கூறின இயேசு உவமானத்தில் தேவனுடைய ராஜ்யம் என்று சொன்னதை கவனியுங்கள்.

கேள்வி நித்திய ஜீவனைப் பற்றி, விளக்கம் பரலோகராஜ்யத்தைப் பற்றி, உவமானம் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி. இன்னொரு முறையாகச் சொன்னால், இவையெல்லாம் ஒன்றுதான். இவைகளுக்குள் மாறுபாடு எதுவும் இயேசு பார்க்கவில்லை. மாறுபாடு உண்டுபண்ணினது வேதநிபுணர்கள். (வேதநிபுணர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் )

நித்திய ஜீவன் பரலோகத்தில் அல்லையா பிரதர்?


நித்திய ஜீவன் பரலோகத்தில் மட்டுமே என்று கூறுகிற வசனம் எதுவும் இல்லையே! மாறாக வேதம் என்ன கூறுகிறது என்றால்:
யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
நீங்கள் மரித்து, பரலோகத்துக்கு போன பிறகு தானா தேவனையும் இயேசுவையும் அறிகிறது? உங்களுக்கு தற்பொழுது தேவனையும் இயேசுவையும் தெரியாதா? உங்களுக்கு தேவனையும் இயேசுவையும் அறிந்திருந்தால் உங்களுக்குள் நித்திய ஜீவன் இல்லையா?

இந்த வசனத்தை கவனமாக வாசியுங்கள்:
1யோவா 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகன், அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது. அப்படியானால், தன் சகோதரனைப் பகைக்காதவனுள் நித்தியஜீவன் நிலைத்திருக்கவேண்டும், அல்லவா? நாம் இறந்த பிறகு நடக்கவேண்டிய நிகழ்வுகளைப்பற்றி யோவான் கூறவில்லை, மாறாக, நாம் இந்த பூமியில் உயிரோடிருக்கும்பொது நடக்கவேண்டியவைகளைப் பற்றியே இங்கே கூறப்பட்டுள்ளது.

இன்னொரு வசனம்:
1யோவா 5:13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு (you have eternal life) என்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
உங்களுக்கு நித்தியஜீவன் உண்டாகப்போகிறது என்றோ, உங்களுக்காக நித்தியஜீவன் வைத்துவைக்கப்பட்டுள்ளது என்றோ கூறாமல், உங்களுக்கு நித்தியஜீவன் உண்டு என்று கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள். உங்களுக்கு நித்தியஜீவன் இப்பொழுதே உண்டு.

இன்னொரு முறையாகச் சொன்னால்: தேவனும் இயேசுவும் தான் நித்தியஜீவன்.
1யோவா 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
1யோவா 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார்" என்பதே அல்லாமல் தரப்போகிறார் என்று எழுதப்பட்டுள்ளதை கவனிக்கவும்.

அப்படியானால், நாம் இறந்த பிறகு என்னவாயிடும், பிரதர்?

யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார்.
இந்த வார்த்தைகளை சொல்லும்போது நீங்கள் விகிவாசிக்கமாட்டார்கள் என்பதை நன்றாக தெரிந்துகொண்டுதான் இயேசு 'இதை விசுவாசிக்கிறாயா?' என்று கேட்டார். நீங்கள் இறந்துபோகிறதைப் பற்றி யோசிக்கிறீர்கள், ஆனால் இயேசு பேசினது இறந்துபோகாமல் இருப்பதைப் பற்றியே. (உடம்பின் சாவைப்பற்றி இயேசு கூறவில்லை.)

முடிவுரை:

இயேசுவை நம்புகிற நீங்கள்தான் தேவனுடைய இராஜ்யம், கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார். நித்தியஜீவன் உங்களுக்குள் இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. மீந்திருக்கிறது என்ன? இந்த உடம்பு அழித்துப்போய் அவரிடம் சேரவேண்டும் என்பதே. விசுவாசத்துட்னும் தைரித்துட்னும் முன்செல்லுங்கள்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
டோம்ஸான் கட்டக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக