திங்கள், 29 செப்டம்பர், 2014

வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்திலை நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் நடந்தேற வேண்டியதா?

வெளிப்படுத்தல் 19, 20, 22 அதிகாரங்களைப்பற்றிய பெரும்பாலும் கிறித்தவர்களின் புரிந்துகொள்ளுதல் ஏறத்தாழ இப்படியே:

  • நிச்சயமற்ற எதிர்காலத்தில் எப்பொழுதோ:
  • இயேசுக் கிறிஸ்து மேகங்கள் மேல் வருவார்,
  • பிசாசை கட்டிப்போடுவார்,
  • 1000 வருடம் அரசாளுவார்,
  • பிசாசை நாசம் பண்ணுவார்.
  • அதின் பிறகு மரித்தோரெல்லாம் உயிர்ப்பிக்கப்பட்டு நியாயத்தீர்ப்படைவார்கள்,
  • பாவிகள் நாசமடைவார்கள்,
  • பரிசுத்தவான்கள் பரலோகத்துக்கு சேர்க்கப்படுவார்கள்,
  • அப்பொழுது புதிய எருசலேம் பரத்திலிருந்தும் இறங்கிவரும்,
  • ஆட்டுக்குட்டியாரவருக்கும் அவருடைய மணவாட்டிக்கும் கலியாணம் நடக்கும், 
  • அதற்கு மேலெ கண்ணீரும், மரணமும், துக்கமும்,  அலறுதலும், வருத்தமும் இராது,
  • பூமி அமைதிப்பூங்கா ஆயிடும்!


இந்த அமைதிப்பூங்கா என்கிற கருத்தை பலப்படுத்த ஏசாயாவின் ஆகமத்திலிருந்தும் அழகான காட்சிகளைக்கூட இணைக்கிறார்கள் போதகர்கள். இவைகளையெல்லாம் சந்தேகமில்லாமல், கேள்வி கேட்காமல் நம்புகிறார் கிறித்தவர்கள்.


இப்படி பூமியெல்லாம் அமைதிப்பூங்கா ஆன பிறகுதானா வெளிப்படுத்தல் 22ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் நடந்தேற வேண்டியது?


வெளிப்படுத்தல் 22:1-5 வசனங்களை வாசிப்போம்:

வெளி 22:1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளி 22:2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
வெளி 22:3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
வெளி 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 
வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள் மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்

(இந்த அதிகாரத்தில் “நகரம்” என்பது புதிய எருசலேம். வெளி 21:23, 22:5 மற்றும் வெளி 21:4 22:3 போன்ற வசனங்களை ஒப்பிட்டு பார்க்கவும்.)

அந்த விருட்சத்தின் இலைகள் “ஜனங்கள்” ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

இங்கெ “ஜனங்கள்” என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கு வார்த்தை G1484 ἔθνος (ethnos). இந்த வார்த்தையின் விளக்கம் “புறஜாதியார்” - மத் 10:5, 18; 12:18, 21; 20:19, 25 போன்ற வசனங்களை பார்க்கவும். (இந்த வார்த்தை தமிழ் வேதாகமத்தில் ஒருசில வசனங்களில் “ஜனங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது தவறு.)

நோயாளிகளாகிய, குணமடையாத “ஜனங்கள்” அல்லது “புறஜாதியார்” இருக்கிறதினாலே தானே அவர்களை குணப்படுத்தக்கூடிய “விருட்சத்தின் இலைகள்” தேவையாயிருக்கிறது?

உலகமெல்லாம் அமைதிப்பூங்கா ஆன பிறகு, சாபம் இராத நிலைமையில், நோயாளிகளாகிய, குணமடையாத “ஜனங்கள்” எங்கே இருந்து வந்தார்கள்?

வெளி 20:11-15ல் பொது நியாயத்தீர்பு முடிந்து, பாவிகளாகிய அவிசுவாசிகள் அனைவரும் அக்கினிக்கடலிலே போடப்பட்டார்களல்லவா, அப்படியிருக்க, இந்த குணமடையாத ஜனங்கள் எங்கே இருந்து வந்தார்கள்?

நகரத்தின் வெளியில் யாரார் இருக்கிறார்கள்?


“அமைதிப்பூங்கா” ஆகிய பூமியில் இருக்கும் புது எருசலேமின் வெளியில் யாரார் இருக்கிறார்கள் என்பதை வெளி 22:14-15ல் பார்க்கிறோம்:

வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
வெளி 22:15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

பாவிகள் (சூனியக்காரர், விபசாரக்காரர், கொலைபாதகர், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர்கள்) அனைவரும் நியாயத்தீர்ப்படைந்து (வெளி 20:11-15) அக்கினிக்கடலில் போடப்பட்டார்களல்லவா? இப்படியிருக்க புது எருசலேமின் வெளியில் இவர் எப்படி வந்தார்கள்?

ஒருவேளை, அப்படியல்லை, பாவிகள் அக்கினிக்கடலில் தான் இருப்பார்கள் என்று நீங்கள் அடம்பிடித்தால், அக்கினிக்கடலுக்கும் புதிய எருசலேமுக்கும் நடுவில் வாசல்கள் இருக்குமா? என்று கேட்கிறேன். ஏனென்றால்:

வெளி 22:14 ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

புது எருசலேமுக்கு 12 வாசல்கள் இருக்கிறது என்று வெளி 21:12 கூறுகிறது.

வெளி 22:14 திரும்பவும் வாசியுங்கள், வாசல்களுக்கு வெளியே இருப்பவர்கள் அவருடைய கற்பனைகளின்படி செய்தால் வாசல்கள் வழியாக உள்ளே பிரவேசிக்கக்கூடும் அல்லவா? ஏற்கனவே அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் நகரத்துக்குள் இருப்பார்களல்லவா? அவர்களுக்கு உள்ளே பிரவேசிக்கும்படிக்கு வாசல்கள் தேவையில்லையே?

அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். 

வெளி 22:4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 
வெளி 22:5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள் மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

வெளிப்படுத்தல் 20ம் அதிகாரத்தில் 20ம் அதிகாரத்தில் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெற்று இயேசுவோடெ கூட 1000 வருடம் அரசாளுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கே அவருடைய ஊழியக்காரர் “சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

அரசாளுவது 1000 வருடமாக இருந்தாலும் சரி, சதாகாலமாக இருந்தாலும் சரி யார் மேல் அரசாளுவார்கள்? பரிசுத்தவான்கள் ஒருவர் மேல் ஒருவர் அரசாளுவாரா? குடிமக்கள் (பிரஜைகள், citizens) இல்லாமல் அரசாளுகிற அரசர்கள் உண்டா?

எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டா?

நான் என் பதிவுகளை வாசிப்பவர்களை விட அறிவாளியல்லை, ஆனால் தேவன் மிக அறிவாளியும் அவருடைய வார்த்தை அறிவின் பெருங்கடலுமாக இருக்கிறது. அந்த பெருங்கடலில் ஆய்ந்து தோண்டினால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடையாமற்ப் போவதில்லை. இது நான் ஒருவர் என்னுடைய அறிவை உங்களுக்கு பகிர்ந்துகொடுக்கும் படி எழுதுகிற பதிவு அல்லை, இது ஒரு கூட்டான முயற்சி. நீங்கள் பார்த்திருக்கிறதும், ஆனால் கவனியாமல் போனதுமான எத்தனையோ வசனங்கள் இருக்கலாம்? உங்கள் மனதில் உருவானதும், ஆனால் கேட்காமற் போனதுமான எத்தனையோ கேள்விகள் இருககலாம். ஒரு கூட்டான முயற்சியினால் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். எனக்குத் தெரிந்தவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி.

யோவா 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

________________________________________
வெளி 22:1ல்  river[G4215] of water[G5204] of life[G2222] என்பதில் G2222 என்கிற வார்த்தை
யோவா 7:38ல் rivers[G4215] of living[G2198] water[G5204] என்பதில் பயன்படுத்தியிருக்கும் G2198 என்கிற வார்தையிலிருந்தும் உண்டானது.

G2222
ζωή (zōē, dzo-ay')
From G2198; life (literally or figuratively): - life (-time).
________________________________________

இயேசவை நம்புகிறவர்களின் உள்ளத்திலிருந்தும் ஜீவத்தண்ணீருள்ள நதி புறப்படும் என்று யோவான் 7:38

அதே யோவான் வெளிப்படுத்தலில் “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறது” என்று கூறுகிறார்.

இந்த இரண்டு வசனங்களும் உண்மையாயிருந்தால் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் இயேசுவை நம்புகிறவர்களின் உள்ளத்தில் இருக்கவேண்டும்.

தேவனுடைய சிங்காசனம் இயேசுவை நம்புகிறவர்களின் உள்ளத்தில் இருக்கிறது என்பதாகி கூறுகிற வசனம் இருக்குமா என்று எனக்கு தற்பொழுது தெரியாது, ஆனால், நீங்களே தேவனுடைய ஆலயம் என்று கூறுகிற வசனம் எனக்கு தெரியும்:

1கொரி 3:16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 

அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.




“அரசாளுவார்கள்” என்று கேட்டவுடன் பெரும்பாலும் கிறித்தவர்கள் திரைப்படங்களில் (23ம் புலிகேசி) அரசர்கள் அரசாளுவதுபோல் அவர்களும் அரசாளுவார் என்று கனவு காண்கிறார்கள்.

முதல் நூற்றாண்டில் வெளிப்படுத்தலின் ஆகமம் யாருக்கு எழுதப்பட்டுள்ளதோ அந்த ஏழு சபைகளுக்கு (வெளி 1:4) யோவான்:

வெளி 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின (And hath made us kings and priests unto God ) என்று கூறும்போது அது இறந்தகாலம் (past tense) ஆயிற்று. (இந்த வசனம் எல்லா மொழிபெயர்ப்புகளிலும் இறந்தகாலமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நடந்தேறவேண்டிய நிகழ்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்புகள் இல்லை.)

அதாவது, முதல் நூற்றாண்டில் ஆசியாவிலிருந்த ஏழு சபைகளுக்கு சார்ந்தவர்கள் அல்லது அந்தச் சபைகளின் மூப்பர்கள் தேவனுக்கு ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருந்தார்கள். அவர்கள் 23ம் புலிகேசியைப் போல் கிரீடமும் செங்கோலும் அணிந்து சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்க வாய்ப்பு கிடையாது.

இதே கருத்தை பேதுரு உறுதிப்படுத்துகிறார்.

கீழே குறிப்பிடப்பட்ட வசனத்தில் ராஜாக்கள் என்று விளக்கம் வருகிற கிரேக்கு வார்த்தை - G934 - ராஜரீகமான என்று மொழிபெயர்க்கப்பட்டதைத் தவிர, பேதுரு கூறுகிற கருத்து மேற்ச்சொன்னது தான்.

1பேத் 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்


G934 (βασίλειος, basileios, bas-il'-i-os)
From G935; kingly (in nature): - royal.
G934 (basileios) என்கிற வார்த்தை G935லிருந்தும் உண்டானது. 

G935 (βασιλεύς, basileus, bas-il-yooce')
Probably from G939 (through the notion of a foundation of power); a sovereign (abstractly, relatively or figuratively): - king.
G935 (basileus) என்கிற வார்த்தைக்கு ராஜா, அரசன் என்று பொருள். 


பேதுரு “நீங்கள் எதிர்காலத்தில் எப்பொழுதோ ராஜரிகமான ஆசாரியக்கூட்டமாவீர்கள்” என்று கூறாமல், “நீங்கள் ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக ... இருக்கிறீர்கள்” என்று கூறினப்போது அவர் என்ன கூறுகிறது என்பது அவருக்கே தெரியாதா?

இதே தலைப்புக்கு தொடர்புள்ள இன்னும் ஒருசில கருத்துக்களை நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன், நீங்கள்? என்கிற பதிவில் வாசிக்கவும்.

இது ஓர் தொடக்கம், இன்னும் சார்பற்ற, காரண காரியத் தொடர்புடைய (logical) ஏராளமான கேள்விகளும் அவைகளுக்கு எனக்கு தெரிஞ்ச பதில்களும் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்

டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக