கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
நான் இங்கே பெங்ளூருவில் ஒரு சிறு வீட்டில் தங்கியிருக்கிறேன். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் ஓர் பிளாத்திக்கு இருக்கை (plastic chair) வாங்க முடிஞ்சது. இந்த சிறு வீட்டில் என் பிளாத்திக்கு இருக்கையிலிருந்து உறுதியாக கூறுகிறேன்: “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்”.
பூமியில் பிழைத்திருக்கிற நான் (டோம்ஸான்) பரத்தில் கிறிஸ்துவுடனேகூட உட்கார்நிருக்கிறேன் என்று சொல்லும்போது இந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது ஒருவேளை நீங்களும் என்னுடனே, “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்” என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
என்னுடைய ஞானஸ்நானம் ஒரு நிகழ்வாக இராமால் மாற்றத்தின் ஒரு செயல்முறையாக இருந்தது என்று எண்ணுகிறேன். (process of transformation)
ரோம 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
ரோம 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோம 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோம 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோம 6:7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
நான் பாவத்துக்கு மரித்தேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுதோ எனக்கும் மற்று சீடர்களுக்கும் வித்தியாசமே கிடையாது.
கலா 3:27: ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கலா 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிறது என்பது நிறைவேறினது நான் ஞானஸ்நானம் மூலமாக பாவத்துக்கு மரித்து உயிர்ப்பிக்கப்பட்டப்பொழுதே.
யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார்.
(இந்த ஓர் கருத்தை தமிழில் விளக்குவது எளிதல்லை)
யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
ஒருவனுக்கு தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புகிற அனைவருக்கும் எதிர்காலத்தில் எப்பொழுதோ நித்தியஜீவன் கிடைக்கப்போகிறது என்று கூறாமல், அறிவதே நித்தியஜீவன் என்பதாகி கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
ஒருவேளை இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்கிற எண்ணம் உங்கள் மனதில் எழும்பினாலும்கூட கொஞ்சம் பொறுமையுடன் வாசியுங்கள்.
நான் கிறிஸ்துவுடன் மரித்தேன், கிறிஸ்துவுடன் உயிர்ப்பிக்கப்பட்டேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுது:
எபே 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
எபே 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
எபே 2:6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
எபே 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
பெரும்பாலும் கிறித்தவர்கள் இந்த வசனங்களை கவனிக்கவே இல்லை, அவர்கள் இப்பொழுதும் கூட அவர்கள் ஜெபங்களில் “நாங்கள் மண்ணும் தூளுமாயிருக்கிறோம்” என்று கதறுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்தாலும் அது இறந்தகாலத்தில் (past tense) எழுதப்பட்ட்து என்பதைக் கவனிக்கமாட்டார்கள்.
இல்லை, அப்படியல்லை, அந்த வசனம் கூறுகிறது “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்தார்” என்றல்ல “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்வார்” (அதாவது, வருங்காலத்தில் எப்போழுதோ நிகழும்) என்று வாதாடினால், அந்த வசனத்திலிருக்கும் மற்று உட்பிரிவுகளும் வருங்காலத்தில் நிகழவேண்டுமல்லவா? ஒரு வசனத்தில் இருக்கும் இறந்தகால நிகழ்ச்சிகளில் ஓன்று மற்றும் வருங்காலத்தில் நிகழும் என்று சொல்வது கீழ்த்தரமான விளக்க உரை (exegesis).
ஒரு உட்பிரிவு வருங்காலத்தில் நிகழவேண்டும் என்பாயாகில், எல்லா உட்பிரிவுகளும் வருங்காலத்தில் நிகழவேண்டும். அப்படியானால்:
நான் இங்கே பெங்ளூருவில் ஒரு சிறு வீட்டில் தங்கியிருக்கிறேன். ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு தான் ஓர் பிளாத்திக்கு இருக்கை (plastic chair) வாங்க முடிஞ்சது. இந்த சிறு வீட்டில் என் பிளாத்திக்கு இருக்கையிலிருந்து உறுதியாக கூறுகிறேன்: “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்”.
பூமியில் பிழைத்திருக்கிற நான் (டோம்ஸான்) பரத்தில் கிறிஸ்துவுடனேகூட உட்கார்நிருக்கிறேன் என்று சொல்லும்போது இந்த மனிதனுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த பதிவை வாசித்து முடிக்கும்போது ஒருவேளை நீங்களும் என்னுடனே, “நான் கிறிஸ்துவுடனேகூட உன்னதங்களிலே (பரத்திலே) உட்கார்நிருக்கிறேன்” என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
நான் மரித்தவன்
நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது கிறித்தவம் என்கிற மதத்தில் சேரும்படிக்கோ, கிறித்தவத்தின் ஏதோ ஒரு வகுப்பில் சேரும்படிக்கோ ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவில்லை.
என்னுடைய ஞானஸ்நானம் ஒரு நிகழ்வாக இராமால் மாற்றத்தின் ஒரு செயல்முறையாக இருந்தது என்று எண்ணுகிறேன். (process of transformation)
ரோம 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
ரோம 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
ரோம 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
ரோம 6:6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
ரோம 6:7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
நான் பாவத்துக்கு மரித்தேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுதோ எனக்கும் மற்று சீடர்களுக்கும் வித்தியாசமே கிடையாது.
கலா 3:27: ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கலா 3:28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவைத் தரித்துக்கொள்கிறது என்பது நிறைவேறினது நான் ஞானஸ்நானம் மூலமாக பாவத்துக்கு மரித்து உயிர்ப்பிக்கப்பட்டப்பொழுதே.
இனிமேல் நான் மரிக்கமாட்டேன், இதை இதை விசுவாசிக்கிறாயா?
யோவா 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா? என்றார்.
நான் இப்பொழுது நித்தியஜீவனை பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
(இந்த ஓர் கருத்தை தமிழில் விளக்குவது எளிதல்லை)
யோவா 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
ஒருவனுக்கு தேவனையும் அவர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் நம்புகிற அனைவருக்கும் எதிர்காலத்தில் எப்பொழுதோ நித்தியஜீவன் கிடைக்கப்போகிறது என்று கூறாமல், அறிவதே நித்தியஜீவன் என்பதாகி கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
மிக முக்கியமான கருத்து.
ஒருவேளை இந்த ஆளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்கிற எண்ணம் உங்கள் மனதில் எழும்பினாலும்கூட கொஞ்சம் பொறுமையுடன் வாசியுங்கள்.
நான் கிறிஸ்துவுடன் மரித்தேன், கிறிஸ்துவுடன் உயிர்ப்பிக்கப்பட்டேன், கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டேன், இப்பொழுது:
எபே 2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
எபே 2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
எபே 2:6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,
எபே 2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
- இங்கெ “உன்னதங்களிலே” என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை ἐπουράνιος (G2032). இந்த வார்த்தையின் விளக்கம் “பரம” அல்லது “பரலோகம்” (Heavenly). இதே வார்த்தை பயன்படுத்தியுள்ள மற்று வசனங்கள்:
மத் 18:35 ... என் பரம பிதாவும் ...
யோவா 3:12 ...பரம காரியங்களை...
எபி 6:4 ... பரம ஈவை ...
எபி 8:5 ... பரலோகத்திலுள்ளவைகளின் ...
எபி 9:23 ... பரலோகத்திலுள்ளவைகளோ...
ஒருசில வசனங்களில் இந்த வார்த்தை வானம் என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனங்களை வாசிக்கும்போது அங்கெயெல்லாம் பரம அல்லது பரலோகம் என்கிற விளக்கம் வருகிறதைப் பார்க்கலாம். - “உன்னதங்களில்” என்பது பரலோகம் என்கிற விளக்கம் கொடுக்கும் இன்னொரு வசனம்:
எபே 1:21 அவரை (இயேசுவை) உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, - எபே 2:6, 7 வசனங்களை யாரும் எதிர்காலத்தில் நடக்கவேணடிய நிகழ்ச்சி போல யாரும் மொழிபெயர்க்கவில்லை என்பதை கவனிக்கவும்.
பெரும்பாலும் கிறித்தவர்கள் இந்த வசனங்களை கவனிக்கவே இல்லை, அவர்கள் இப்பொழுதும் கூட அவர்கள் ஜெபங்களில் “நாங்கள் மண்ணும் தூளுமாயிருக்கிறோம்” என்று கதறுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்தாலும் அது இறந்தகாலத்தில் (past tense) எழுதப்பட்ட்து என்பதைக் கவனிக்கமாட்டார்கள்.
இல்லை, அப்படியல்லை, அந்த வசனம் கூறுகிறது “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்தார்” என்றல்ல “நம்மை உன்னதங்களிலே ... உட்காரவும் செய்வார்” (அதாவது, வருங்காலத்தில் எப்போழுதோ நிகழும்) என்று வாதாடினால், அந்த வசனத்திலிருக்கும் மற்று உட்பிரிவுகளும் வருங்காலத்தில் நிகழவேண்டுமல்லவா? ஒரு வசனத்தில் இருக்கும் இறந்தகால நிகழ்ச்சிகளில் ஓன்று மற்றும் வருங்காலத்தில் நிகழும் என்று சொல்வது கீழ்த்தரமான விளக்க உரை (exegesis).
- அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பிக்கப்படவில்லை! வருங்காலத்தில் எப்பொழுதோ உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.
- நீங்கள் கிருபையினாலே இரட்சிக்கப்படவில்லை வருங்காலத்தில் எப்பொழுதோ இரட்சிக்கப்படுவீர்கள்.
இறந்தகால நிகழ்ச்சிகளை வருங்கால நிகழ்ச்சிகளாக விளக்கினால் மட்டுமே பெரும்பாலும் கிறித்தவர்களின் கோட்பாடுகளும் இறையியலும் இறுதியியலும் சரியாய் வரும்.
அன்புடன்
டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக