புதன், 1 அக்டோபர், 2014

வேதத்தில் பூமி, உலகம்

‘உலகம்’ என்றால் என்ன?

“உலகம்” என்கிற வார்த்தைக்கு பொதுவான விளக்கம் பூமியின் மேல் மக்கள் குடியிருக்கக் கூடிய பங்கு. ஆங்கில வேதாகமத்தில் (கெ. ஜெ. வி) “உலகம்” என்கிற வார்த்தைக்கு “பூமியின் மேல் குடியிருக்கத்தக்க பங்கு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (the habitable part of his earth - நீதி 8:31). பொதுவாக உலகம் என்பதற்கு இதுவே விளக்கம். இன்னொரு விளக்கம் பூமியில் தங்கியிருக்கும் குடிமக்கள் அனைவரும் என்பதே.

ஆனால், உலகம் என்பதற்கு பூமியின் மேல் குடியிருக்கத்தக்க பங்கு அனைத்தும் என்கிற விளக்கம் எப்பொழுதும் இல்லை.

உதாரணம் #1


மத் 4:8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
லூக 4:5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:

சாத்தான் இயேசுவை எருசலேமின் சுற்றுப்புறங்களிலுள்ள ஏதோ ஒரு உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தார். பூமியிலை மிக உயர்ந்த மலை எவரெஸ்ட், அதின் உயரம் 14:16 கி.மி.

பூமி ஒரு உருண்டை என்பதற்க்கு விவாதம் எதுவும் இல்லை (பூமி உருண்டை அல்லை என்று அடம்பிடிக்கிற கிறித்தவர்களும் உண்டு.) பூமியின் ஆரம் 6371 கி.மி.

பூமியின் ஆரமும் எவரெஸ்ட் மலையின் உயரமும் ஒப்பிட்டு பார்க்கிறது (வலது பக்கத்தில் சிவப்பு புள்ளியாக காணப்படுகிறது எவரெஸ்ட் மலையின் உயரம்)


6371 கி.மி. ஆரமுடைய பூமியின் மேல் இருக்கும் 14:16 கி.மி உயரம் மட்டுமுள்ள எவரெஸ்ட் மலையின் மேல் ஏறினாலும் உலகத்திலுள்ள சகல ராஜ்யங்களையும் பார்க்கக்கூடுமா? எவரெஸ்ட் மலையை விட உயரமுள்ள மலை எருசலேமின் அல்லது இஸ்ரவேலின் சுற்றுப்புறங்களில் இருக்கிறதா? இருந்ததா? ஒரு செயற்கைக்கோளில் (satellite) ஏறினாலும் “ஒரு நிமிஷத்திலே” உலகத்தின் சகல ராஜ்யங்களையும் காண்பிக்கக்கூடுமா?

உதாரணம் #2


லூக 2:1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்து ராயனால் கட்டளை பிறந்தது.

(அந்நாட்களில் என்றால் மரியாள் இயேசுவை கருவுற்றிருக்கும் நாட்களில்)

அகஸ்து ராயனுடைய ரோமா பேரரசின் ஆட்சிப்பகுதி தற்பொழுதிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், முதற்கொண்டு பாலஸ்தீன் நாடு மட்டுக்குமே இருந்தது. (வரைப்படம் #2 காணவும்)

ரோமா பேரரசின் ஆட்சிப்பகுதி
இப்படியிருக்க, அகஸ்து ராயன் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற அவருடைய அதிகாரத்தின் கீழில் அல்லாத நாடுகளில் குடிமதிப்பு எழுதவேண்டும் என்று கட்டளையிடுவாரா? ஒருவேளை அவர் கட்டளையிட்டால் அந்த நாட்களிலுள்ளவர்கள் அதை ஒத்துக்கொள்வார்களா? பாக்கிஸ்தான் பிரதமர் இந்தியாவில் குடிமதிப்பு எழுதவேண்டும் என்று கட்டளையிடுவாரா? அப்படி கட்டளையிட்டால் அதின் விளைவு என்னவாக இருக்கும்?

உதாரணம் #3


பவுலைப் பற்றி யூதர்கள்:

அப் 17:6 அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.

பவுல் சுவிசேஷம் பிரசங்கம் பண்ண பயணம் பண்ணின வழிகளின் வரைபடம்


பவுல் சுவிசேஷம் பிரசங்கம் பண்ண பயணம் பண்ணின வழிகளின் வரைபடம் காணவும்.

பவுல் இந்தியா, பாக்கிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் பண்ணவே இல்லை; ஆனால் யூதர்கள் என்ன கூறினார்கள்: “உலகத்தைக் கலக்குகிறவர்” என்று கூறினாரல்லவா?

முடிவுரை:


வேத்தில் எங்கேயோ “உலகம்” என்கிற வார்த்தை வாசித்தாலுடன் அதை பொதுமைப்படுத்தி, உலகம் முழுவதும் என்று எண்ணாதிருங்கள். அதுவும் அல்லாமல், ஒவ்வொரு வசனத்திலும் பயன்படுத்தியிருக்கும் கிரேக்கு அல்லது எபிரேயு வார்த்தையின் விளக்கம் என்ன என்றும் அந்த வார்த்தை என்ன என்றும் பகுத்தறியுங்கள்.

உதாரணமாக: மத்தேயு 4:8ல் உலகம் என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கு வார்த்தைக்கு (G2889 κόσμος / kosmos / kos'-mos) அந்த வசனத்தில் உலகம் முழுவதும் என்கிற விளக்கம் வராது. ஆனால், யோவான் 3:16ல் அதே வார்த்தைக்கு முழு உலகம் அல்லது  என்கிற விளக்கம் வருகிறது. சுயதோற்றத்தின்படி விளக்கம் கொடுக்கவேண்டும் என்று நான் சொல்லுவதில்லை, மாறாக, பகுத்தறிவுடன் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதே என் கருத்து.

அன்புடன்

டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக