சனி, 18 ஏப்ரல், 2015

ஊமையான ஆவி பிடித்த வாலிபனும் சாத்தானும்

நண்பர்களே.

நாம் வேதத்தை வாசிக்கும்போது கதையின் ஓட்டத்துக்கு ஒப்‍பாகவும் நமது முன்னெண்ணங்களுக்கு ஒப்‍பாகவும் வாசிக்கிறதைத் தவிர, ஆராய்ந்து வாசிக்கிறதில்லை.  ஊமையான ஆவி பிடித்தது என்று எண்ணப்படுகிற வாலிபனைப் பற்றிய விவரணை இதற்கான ஒரு மிகச்சிறந்த உதாரணம்.



அந்த வாலிபனைப் பற்றிய விபரங்கள் பொழிப்பான 3 சுவிசேஷங்களிலிருந்தும் ஒன்று சேர்ப்போம்:

மத் 17:15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்
மார் 9:17 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 
மார் 9:18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 
லூக் 9:39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கின பின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.

இந்த நிகழ்சி இயேசு மறுரூபமான பிறகு சீடர்களுடன் திரும்பிவரும்போது நடந்தேறினது.


  • 3 சுவிசேஷங்களிலும் ஒரே தந்தையும் மகனும் தான்.
  • இயேசுவோ அந்த வாலிபனுடைய தந்தையோ பேசின வார்த்தைகள் 3 சுவிசேஷங்களிலும் ஒரேபோல அல்லை.
  • மத் 17:15ல் அந்த வாலிபன் சந்திரரோகி.
  • மார் 9:17ல் ஊமையான ஆவியால் பிடிக்கப்பட்டவன்.
  • லூக் 9:39ல் ஆவியால் பிடிக்கப்பட்டவன்.

இப்போது, அந்த வாலிபனுடைய நோயின் அறிகுறிகளை கவனிப்போம் (ஒருசில வார்த்தைகள் தமிழ் வேதாகமத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படாததால் வேறு மொழிபெயர்ப்புகளிலிருந்தும் எடுத்துள்ளது):

  • அடிக்கடி தீயிலும், ஜலத்திலும் விழுகிறான்.
  • நுரை தள்ளுகிறான்.
  • பல்லைக் கடிக்கிறான்
  • சோர்ந்துபோகிறான்.
  • அலறுகிறான்.
  • காயப்படுத்துகிறான்.
  • நொறுக்கப்படுகிறான்.

இந்த அறிகுறிகளை ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரிடம் காண்பித்தால், அந்த வாலிபனுடைய நோய் வலிப்பு நோய் (காக்காய் வலிப்பு, epilepsy) என்று சொல்வார். ஆங்கிலத்தில் ESV, ASV, ISV, RV போன்ற மொழிபெயர்ப்புகளிலும் தமிழில் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலும் மத் 17:15ல் “சந்திரரோகி” (lunatic) என்பதற்கு பதிலாக “வலிப்பு நோயாளி” (epileptic) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.


“சந்திரரோகத்துக்கும்” “வலிப்பு நோய்க்கும்” உள்ள மாறுபாடு.



“சந்திரரோகம்” என்கிற பெயரே பழைய காலத்திலிருந்த  மூடநம்பிக்கையின் பலன். பழைய காலத்துள்ள மனிதர்கள் வலிப்பு நோய் சந்திரனுடைய அல்லது சந்திரக்கடவுளின் பாதிப்பினால் உண்டாகிறது என்பதாக எண்ணினார்கள். ஆதலால், சந்திரரோகம் என்கிற பெயர் உண்டாயிற்று. இப்பொழுது மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணி, வலிப்பு நோய்க்கும் சந்திரனுக்கும் தொடர்பு இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆங்கில வேதாகமத்தில் (KJV) மத் 17:15ல் பயன்படுத்தப்பட்டுள்ள lunatick (சந்திரரோகி) என்கிற வார்த்தை லத்தீன் மொழியில் luna (சந்திரன்) என்கிற வார்த்தையிலிருந்தும் உண்டானது. இதற்கான கிரேக்க வார்த்தை selēniazomai (ஸ்ட்ராங்ஸ் அகராதியில் G4583) selēnē (சந்திரன் G4582) என்கிற வார்த்தையிலிருந்தும் உண்டானது.

இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பிழைத்திருக்கும் கல்விகற்ற யாரும் வலிப்பு நோயை ஒரு மன நோய் (பைத்தியம்) என்று எண்ணுகிறதில்லை. பெயர்பெற்ற எத்தனையோ சிறந்த சிந்தனையாளர்கள், பேரரசர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் வலிப்பு நோயாளிகளாக இருந்தார்கள். ஒருசில உதாரணங்கள்: சாக்ரடீஸ் (Socrates), ஜூலியஸ் சீசர் (Julius Caesar), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoevsky), சூசன் போயில் (Susan Boyle), விளாடிமிர் லெனின் (Vladimir Lenin).

நமக்கு பைத்தியத்துக்கும் வலிப்பு நோய்க்கும் உள்ள மாறுபாடு தெரிந்திருக்கிறது. வலிப்பு நோய் நரம்பியல் சார்ந்த கோளாறு. பைத்தியம் ஒரு உளவியல் கோளாறு. பழைய காலத்திலிருந்த மனிதர்களுக்கு இந்த மாறுபாடு தெரிந்திருக்கவில்லை.

சந்திரரோகமும் (மத் 17:15), ஊமையான ஆவியும் (மார் 9:17) ஒன்றுதானா? இவைகள் இரண்டும் ஒனறுதான் என்று நிரூபிக்கக் கூடுமா? ஊமையான ஆவி சந்திரனிலிருந்தும் வருகிறதா? வேதத்திலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டிருக்கயில் ஏன் மத்தேயுவும் மார்குவும் ஒரே நிகழ்வை வேற்றுமையுடன் எழுதினார்?

அந்த வாலிபனுடைய நோய் என்ன என்பதற்கு உறுதியில்லை, அப்படியிருக்க அந்த நோய் சாத்தானால் அல்லது பிசாசினால் உண்டானது என்பதற்கு உறுதி இருக்குமா?

மத் 17:18ல் இயேசு பிசாசை அதட்டினார் என்றும் லூக் 9:42ல் இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டினார் என்றும் எழுதப்பட்டுள்ளதை எப்படியும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால், மார்கு 9:25ல் இயேசு ஊமையும் செவிடுமான ஆவியை அதட்டினார் என்று வாசிக்கும்போது உண்மையாகவே எனக்கு சிரிப்பு வருகிறது. சாதாரண மனிதராகிய நமக்கு செவிடானவர்களிடம் பேசுவது பயனற்றதாக இருக்கிறது என்று தெரியும், அப்பொழுது ஞானிகளில் ஞானியான இயேசவுக்கு தெரியாதா?

சிறிது காலத்திற்குமுன் வரைக்கும் வலிப்பு நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட, தரப்படுத்தப்பட்ட சிகிச்சை இருக்கவில்லை என்பதை நினைத்தால், முதல் நூற்றாண்டில் மருந்துகளோ, உபகரணங்களோ இல்லாமல் இயேசு வலிப்பு நோயாளியை குணப்படுத்தினது அவர் தேவனுடைய குமாரன் என்பதற்கான மிகச்சிறந்த அத்தாட்சி.

வலிப்பு நோய் பிசாசிலிருந்தும் உண்டாகிறதானால் மூளையின் மடல் நீக்கம் (lobotomy) பண்ணி வலிப்பு நோயாளிகளை குணப்படுத்துகிற மருத்துவர்களுக்கு சாத்தான் அல்லது அசுத்த ஆவி மூளையின் எந்த மடலுக்குள் ஒளிந்திருக்கிறான் என எப்படி தெரியும்? அல்லது சாத்தானுக்கு ஒளிந்திருக்கும்படிக்கு மூளைக்குள் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறதா?

முடிவுரை: 


சாத்தான் என்றோ, ஊமையான ஆவி என்றோ, அசுத்த ஆவி என்றோ என்ன பெயரினால் அழைத்தாலும் சரி, இயேசு குணப்படுத்தின அந்த வாலிபனுடைய நோய் வலிப்பு நோய்தான். வலிப்பு நோய் ஒரு நரம்பியல் கோளாறு. அது சாத்தானால் உண்டாகிறதில்லை. வேதாகமம் ஒரு அறிவியல் புத்தகம் அல்லை என்பதை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சந்திரரோகி, ஊமையான ஆவி, பிசாசு போன்ற வார்த்தைகள் அப்பொழுதிருந்த மூடநம்பிக்கைகளுக்கு அத்தாட்சியாக இருக்கிறதைத் தவிர, சாத்தான் என்கிற ஒரு நபர் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி அல்லை.

கிறிஸ்துவுக்குள்,
டோம்ஸான் கட்டய்க்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக